பெண்களை மானபங்கப்படுத்தியதாக முன்னாள் விரிவுரையாளர் மீது ஆறு குற்றச்சாட்டுகள்

பெண்களை மானபங்கப்படுத்தியதாக முன்னாள் விரிவுரையாளர் மீது ஆறு குற்றச்சாட்டுகள்

1 mins read
e6f788b9-7729-47b9-abe2-ca536445f9e1
-

பல பெண்­களை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தாக முன்­னாள் தொழில்­நுட்­பக் கல்­விக் கழக விரி­வு­ரை­யா­ளர் மீது நீதி­மற்­னம் ஒன்­றில் வழக்கு பதி­வா­கி­யுள்­ளது.

பெண்­களை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தாக ஐந்து குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவ்­வாறு செய்ய முயன்­ற­தாக ஒரு குற்­றச்­சாட்­டை­யும் 47 வயது டேரன் குவெக் சீ-வென் எதிர்­நோக்­கு­கி­றார்.

சிங்­கப்­பூ­ர­ரான அவர் சீமெ­யில் உள்ள ஐடிஈ காலேஜ் ஈஸ்ட் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் 2019ஆம் ஆண்­டில் அந்தக் குற்­றங்­க­ளைப் புரிந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

குற்­றச் செயல்­க­ளுக்கு ஆளா­ன­தா­கச் சந்­தே­கி­கப்­ப­டு­வோ­ரின் விவ­ரங்­கள் நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்­தாம் தேதி­யன்று குவெக் குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டத் தொடங்­கி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

குவெக் மீதான வழக்கு இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று விசா­ர­ணைக்கு வரும். அவர் மீது பதி­வா­கி­யுள்ள ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டும் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஓராண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.