உயிரை மாய்த்துக்கொண்டோர் எண்ணிக்கை 2012க்கு பிறகு கடந்த ஆண்டில் ஆக அதிகம்

2 mins read
92cd7053-0f98-4273-ba1b-2aef0ef6f0a5
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு 452 பேர் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது, 2012க்குப் பிறகு ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

சிங்­கப்­பூர் அபய ஆலோ­சனை சங்­கம் (எஸ்­ஓ­எஸ்) நேற்று இந்­தத் தக­வலை வெளி­யிட்­டது. 2019ல் பதி­வா­கி­யி­ருந்த 400 சம்­ப­வங்­க­ளை­விட கடந்த ஆண்டு சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 13 விழுக்­காடு கூடி­யது.

அனைத்து வய­துப் பிரி­வு­க­ளி­லும் உயிரை மாய்த்­துக்­கொண்­டோர் எண்­ணிக்கை அதி­கம் காணப்­பட்­ட­தாக எஸ்­ஓ­எஸ் கூறி­யது.

குறிப்­பாக, 60 வய­துக்­கும் மேற்­பட்­டோ­ரி­டையே கடந்த ஆண்டு 154 உயிரை மாய்த்­துக்­கொண்ட சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இந்த வய­துப் பிரி­வி­ன­ரி­டையே 1991க்குப் பிறகு இது ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும். 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 26 விழுக்­காடு அதி­கம்.

"நாட்­டின் பொரு­ளி­யல், மக்­க­ளின் வாழ்க்­கை­முறை, மன­ந­லம் ஆகி­ய­வற்றை கொவிட்-19 சூழல் கடு­மை­யா­கப் பாதித்­துள்­ளது. தற்­போ­தைய சூழலை மூத்­தோர் எவ்­வாறு சமா­ளிக்­கின்­ற­னர் என்­பது பற்றி நாங்­கள் மிக­வும் கவலை கொள்­கி­றோம்," என்று எஸ்­ஓ­எஸ் தலைமை நிர்­வாகி கேஸ்­பர் டான் கூறி­னார்.

"நோய்ப் பர­வல் சூழ­லில் தனி­மை­யில் வாழும் மூத்­தோர் பலர், நிதி நில­வ­ரம் குறித்து கவலை அடைந்­தி­ருப்­ப­தற்­கும் வாய்ப்பு அதி­கம் உள்­ளது.

"மாறி­வ­ரும் சூழ­லுக்கு ஏற்ப தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் மூத்­தோர் எதிர்­நோக்­கும் சிர­ம­மும் தனிமை உணர்வு நீடித்­தி­ருப்­ப­தும் அவர்­க­ளுக்கு கடும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்," என்று திரு டான் விவ­ரித்­தார்.

2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க, கடந்த ஆண்டு மூத்­தோ­ரி­டையே உயிரை மாய்த்­துக்­கொண்ட சம்­ப­வங்­கள் அதி­க­ரித்த போதி­லும், தனது 24 மணி நேர உதவி எண்­ணுக்கு அவர்­க­ளி­ட­மி­ருந்து குறை­வான அழைப்­பு­கள் வந்­த­தாக எஸ்­ஓ­எஸ் தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் இவ்­வாண்டு மார்ச் வரை­யி­லான 2020 நிதி ஆண்­டில், மூத்­தோ­ரி­ட­மி­ருந்து எஸ்­ஓ­எஸ் சங்­கத்­திற்கு 4,455 அழைப்­பு­கள் வந்­தன.

ஒப்­பு­நோக்க, 2019 நிதி ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 4,816ஆக இருந்­தது.