அதிகாரிகளின் உதவி நாடிய உள்ளூர் ஊழியர்கள் அதிகம்

அதிகாரிகளின் உதவி நாடிய உள்ளூர் ஊழியர்கள் அதிகம்

2 mins read
bbcb595d-a785-4b38-a4d0-9dac06ea4047
-

கொவிட்-19 சூழலில் சம்பளப் பிரச்சினைகள், தவறான பணிநீக்கம்

சேர வேண்­டிய சம்­ப­ளத் தொகை­, தவ­றான முறை­யில் வேலை­யி­ல் இருந்து நீக்­கப்­பட்­டது ஆகி­ய­வற்றின் தொடர்­பில் தங்­கள் முத­லா­ளிகள் மீது புகார் தெரி­வித்து அதிகாரிகளின் உதவி நாடிய ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் அதி­க­மாக இருந்­தது.

உள்­ளூர் ஊழி­யர்­கள் தாக்­கல் செய்த வேலை நிய­மனக் கோரிக்­கை­கள், மேல்­மு­றை­யீ­டு­கள் 2019 ஆம் ஆண்­டில் 1,000 ஊழி­யர்­களுக்கு இரண்டு என்ற அள­வில் இருந்­தன. அவை சென்ற ஆண்­டில் 1,000 ஊழி­யர்­க­ளுக்கு 2.17 ஆகக் கூடி­ன.

ஆகப் புதிய புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வரு­கின்­றன.

தாக்­க­லான கோரிக்­கை­களில் பெரும்­பா­லா­னவை சம்­ப­ளம் தொடர்­பா­னவை. குடி­யி­ருப்பு மற்­றும் உணவுச் சேவை, தொடர்பு தக­வல், கட்­டு­மான தொழில்­து­றை­க­ளில்­தான் இத்­த­கைய கோரிக்­கை­கள் அதி­கம் தாக்­க­லா­கின.

கொவிட்-19 கார­ண­மாக பொரு­ளி­யல் முடக்­கம் நடப்­புக்கு வந்­த­போது, இவற்­றில் சில துறை­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டன.

இதன் கார­ண­மா­கவே அடிப்­படை சம்­ப­ளம் தொடர்­பில் பிரச்­சினைகள் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று தெரி­கிறது.

மனி­த­வள அமைச்சு, சச்­ச­ர­வு­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கான முத்­த­ரப்பு குழு ஆகி­ய­வற்­றி­டம் சென்ற ஆண்டு மொத்­தம் 8,697 வேலை நிய­மன கோரிக்­கை­களும் மேல்­மு­றை­யீ­டு­களும் தாக்­க­லா­யின.

அவற்­றில் ஏறத்­தாழ 59 விழுக்­காடு அல்­லது 5,142 புகார்­கள் உள்­ளூர் ஊழி­யர்­க­ளி­டம் இருந்து வந்­தவை.

அதே­வே­ளை­யில், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் இருந்து வந்த இத்­தகைய கோரிக்­கை­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆண்டு பெரி­தும் குறைந்­த­தாக இந்த அமைப்­பு­க­ளைச் சேர்ந்த புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

புகார்­களில் ஏறத்­தாழ 83 விழுக்­காடு சம்­பள கோரிக்­கை­க­ளாக இருந்­தன. ஏறக்­கு­றைய 15 விழுக்­காட்டுப் புகார்­கள் வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டது தொடர்­பா­னவை.

சம்­ப­ளம் தொடர்­பாக உள்­ளூர் ஊழி­யர்­கள் விடுத்த கோரிக்­கை­கள் சென்ற ஆண்டு அதி­க­ரித்­தன.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இத்­த­கைய புகார்­கள் குறைந்­தன.

சம்­ப­ளம் தொடர்­பான புகார்­களில் ஏறத்­தாழ 84 விழுக்­காடு புகார்­க­ளுக்கு இரண்டே மாதங்­களில் தீர்­வு­ கா­ணப்­பட்­டது. எஞ்சிய 16 விழுக்­காடுப் புகார்­கள் வேலை நிய­மனக் கோரிக்கை நடு­வர் மன்­றத்­திற்கு அனுப்­பப்­பட்­டன.

பொரு­ளி­யல் சூழ்­நிலை சரி­யில்­லா­மல் இருந்­த­தால் சம்­பள நிபந்­தனை­கள் தொடர்­பில் இணக்­கம் ஏற்­ப­டு­வது சிர­ம­மாக இருந்­தது என்று அமைச்­சும் அந்­தக் குழு­வும் தெரி­வித்­தன.

இருந்­தா­லும் ஏறத்­தாழ 92 விழுக்காடு ஊழி­யர்­கள் தங்­க­ளுக்குச் சேர­வேண்­டிய சம்­ப­ளத்தை அந்­தக் குழு­வின் உத­வி­யு­டன் முற்­றி­லும் பெற்­றுக் கொண்­டு­விட்­ட­னர்.

மற்­ற­வர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் சம்­பளத்­தில் ஒரு பகு­தி­யைப் பெற்­ற­னர். எஞ்­சிய 3 விழுக்­காட்­டி­ன­ரில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அதிக வரு­வாய் பிரி­வி­னர். அவர்­கள் ஊதி­யத்­தைத் திரும்­பப் பெற­வில்லை.

மொத்­தத்­தில் மனி­த­வள அமைச்­சும் முத்­த­ரப்­புக் குழு­வும் சென்ற ஆண்­டில் $15 மில்­லி­யன் சம்­பளத்தை மீட்டு அதை உரிய ஊழி­யர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தன.