'பொதுவான தேசிய அடையாளம் முக்கியம்'

1 mins read
b52e562b-6431-4498-b0a3-3fce54c74e04
-

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளு­டைய கலாசார வேர்­க­ளைப் போற்­றிப் பாது­காக்க உத­வும் நோக்­கத்­தில் இரு­மொ­ழிக் கொள்கை உரு­வாக்­கப்­பட்­டது.

இருந்­தா­லும் ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளு­டைய சொந்த சமூ­கத்­திற்கு அப்­பா­லும் செயல்­பட்டு பொது­வான தேசிய அடை­யா­ளத்தை உரு­வாக்க வேண்­டும் என்று சிங்கப்பூர் முன்­னோ­டித் தலை­வர்­கள் விரும்­பி­ய­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் சமூ­கப் பிரச்­சி­னை­களும் கொந்­த­ளிப்­பும் நில­விய 1966 கால­கட்­டத்­தில் இரு­மொ­ழிக் கொள்கை தோற்­று­விக்­கப்­பட்­டது என்­பதை அவர் சுட்­டி­னார்.

ஒரே சமூ­க­மாக நாம் கடைப்­பிடித்து வரும் நன்­னெ­றி­களைக் கருத்­தில்­கொண்டு இரு­மொ­ழிக் கொள்­கையைச் சீர்­தூக்கி பார்க்க வேண்டும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

இனம், மொழி, சம­யம் எப்­படி இருந்­தா­லும் நியா­ய­மான சமூ­கத்தை நாம் பலப்­ப­டுத்த முடி­யும். எல்­லா­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து நல்­லி­ணக்­கத்­து­டன் வசிக்க முடி­யும்.

ஒரே மக்­க­ளாக ஐக்­கி­யத்­து­டன் நாம் முன்­னேற முடி­யும் என்­பதே நமது சிங்­கப்­பூர் அடை­யா­ளத்­துக்­கான திட்­ட­வட்­ட­மான அம்­சங்­கள் என்றார் அவர்.

டன்­மன் உயர்­நி­லைப் பள்­ளி­யின் 65வது ஆண்­டு­விழா கொண்­டாட்­டத்­தில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு பேசிய பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங், சிங்­கப்­பூ­ரர்­கள் கவ­ன­மாக இல்லை என்­றால் சிங்­கப்­பூ­ரின் நல்­லி­ணக்­கம் வெகு விரை­வில் பாதிக்­கப்­பட்­டு­வி­டும் என்­ப­தையே அண்மைய இன, சமய பதற்­றச் சம்­ப­வங்­கள் எடுத்­துக்­காட்­டு­வதாகத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தோற்­று­விக்­கப்­பட்ட முதல் சிறப்பு உத­வித்­திட்ட பள்­ளி­களில் ஒன்­றான டன்­மன் உயர்­நிலைப் பள்­ளி­யின் பாரம்­ப­ரி­யம் பற்­றி­யும் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.