செய்திக்கொத்து

2 mins read
eaa6b9fd-8c6b-4791-918b-b5f063cacc60
-

சிறுவன் மானபங்கம்:

ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

சிறு­வ­னைப் பல முறை மான­பங்­கப் படுத்­தி­ய­தா­கத் தொடக்­கப் பள்ளி ஆசி­ரி­யர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. 42 வயது சிங்­கப்­பூ­ர­ரான அந்த ஆட­வர், 2017, 2018ஆம் ஆண்டு­களில் தனது வேலை­யி­டத்­தில் சிறு­வனை மானபங்கப்­ப­டுத்­தி­ய­தாக ஐந்து குற்­றச்­சாட்­டு­கள் பதி­வு­செய்­யப்­பட்­டன. ஆசி­ரி­யர், சிறு­வன் இரு­வ­ரின் விவ­ரங்­க­ளை­யும் வெளி­யி­டத் தடை உத்­த­ரவு உள்­ளது.

2018ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து அந்த ஆட­வர் தற்­கா­லி­க­மா­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தா­கக் கல்வியமைச்சு தெரி­வித்­தது. நேற்று முன்­தி­னம் அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். அடுத்த மாதம் ஐந்­தாம் தேதி­யன்று அவ­ரின் வழக்கு விசா­ர­ணைக்கு வரும். 14 வய­துக்­குக் குறை­வான ஒரு­வரை மானபங்கப்படுத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது மூன்றில் ஒன்றுக்கு மேலான தண்டனைகள் விதிக்கப்படலாம்.

வருங்காலத்தில் கிருமிப் பரவலைக் கையாள $100 பில்லியன் தேவை

வருங்காலத்தில் கிருமிப் பரவல் அடிக்கடி ஏற்படக்கூடும், இன்னும் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள இப்போதே அவசரமாக முதலீடு செய்யவேண்டும். அதற்கு கொவிட்-19 கிருமிப் பரவல் முடியும் வரை காத்திருக்கமுடியாது என்று வலியுறுத்தப்படுகிறது. நிலைமையைச் சமாளிக்க அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 100 பில்லியன் வெள்ளி தேவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை, உலக நாடுகள் செலவிடத் தயாராய் இருப்பதைவிட அதிகம் என்று அனைத்துலக நிபுணர் குழு ஒன்று, இத்தாலியின் வெனிஸ் நகரில் கூடிய உலகின் ஆகப் பெரிய பொருளியல்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்களிடம் சுட்டியது.

ஆண்டுதோறும் கிருமிப் பரவலைக் கையாள அரசாங்கங்கள் கூடுதலாகச் செலவிடத் தயாராய் இருக்கும் தொகையில் 700 மடங்கு தேவைப்படும் என்று ஜி-20 குழு சொன்னது. சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் குழுவின் தலைவர்களில் ஒருவர்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் வேலை பயிற்சி உதவித் திட்டம்

கொவிட்-19 கிருமிப் பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது. வேலை தேடிக்கொள்ள உதவ திட்டம் அத்தகையோருக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்கும்.

'கோல்' எனப்படும் வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டத்தின் மூலம் அடுத்த ஈராண்டில் குறைந்தது 550 பலனடைவர்.

18லிருந்து 59 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூரர்கள் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

புக்கிட் பாத்தோக் திருட்டு: சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு

புக்கிட் பாத்தோக்கில் அங்கீகாரம் பெற்று வட்டித் தொழில் செய்பவரிடமிருந்து ஆயுதம் ஏந்தியபடி திருடியதாகச் சந்தேகிக்கப்படுபவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 30 வயதான சையத் ஷாஹ்ருல் மொஹிபுர் ரஹ்மான், கடந்த வியாழக்கிழமையன்று இரவு சுமார் 7.10 மணிக்கு புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகச் சொல்லப்படும் சையத், சுமார் 11 மணிநேரத்திற்குப் பின் கேலாங் லோரோங் எட்டில் கைதானார். இம்மாதம் 16ஆம் தேதியன்று சையத் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.