தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காண்டாமிருகங்கள் இருந்த இடத்திற்குள் அத்துமீறியவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
cc9bed8d-3168-4c10-9c9c-383a3e29baea
வீ யீ காய் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், யூடியூக் காணொளி -

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில், வெள்ளை காண்டா மிருகங்கள் வசிக்கும் பகுதிக்குள் சாகச செயல் புரிந்த 19 வயது வீ யீ காய் மீது இன்று (ஜூலை 12) நீதிமன்றத்தில் சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி, பிற்பகல் 2.40 மணி அளவில் வீ காண்டாமிருகத்தின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டது.குறும்புச்செயல் புரிந்த மேலும் இரு குற்றச்சாட்டுகளும் வீ மீது சுமத்தப்பட்டன.

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 2.40 மணியளவில் புக்கிட் தீமா சாலையை அடுத்து சிக்ஸ்த் அவென்யூவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு தகவல் பதாகை அடித்து உடைத்ததில் $900 சேதத்தை வீ ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் காலை அருகிலுள்ள சிக்ஸ்த் கிரசெண்ட்டில் இரு கார்களின் பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு கிட்டத்தட்ட $2,800 சேதத்தையும், ஒரு பிஎம்டபிள்யூ காருக்கு $1,600க்கும் அதிகமான சேதத்தையும் ஏற்படுத்தியதாக வீ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, மாலை 5.40 மணி அளவில், சம்பவம் குறித்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் புகார் அளித்திருந்ததாக போலிஸ் கூறியது.

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் வீ அத்துமீறி நுழைந்து சாகசச் செயல் செய்த காணொளி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்போது அவரது டிக்டாக் கணக்கை 33,000 பேர் பின்தொடர்ந்தனர்.

வீக்கு இன்று $15,000 பிணை நிர்ணயிக்கப்பட்டது. வழக்கு ஆகஸ்ட் 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்