தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரிம வெளியேற்றத்தை முன்கூட்டியே குறைக்க திட்டம்

2 mins read
dc4ac1dc-bbc8-442a-ad61-13c9ee817d08
எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் பொதுத் துறை அதன் நிலைத்தன்மை, குறைந்த கரிம வெளியேற்ற முயற்சிகள் ஆகியவை தொடர்பில் பெருமளவிலான மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பது, தண்ணீர் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பது, மற்ற நாடுகளுக்கும் முன்னதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.

260,000 வீடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவு வரை 2030ஆம் ஆண்டுக்குள் பொதுத் துறை அதன் சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிக்க இருக்கிறது.

இந்த இலக்கை அடைய எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, 2035ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசாங்க அமைப்பு கார்களும் சுற்றுப்புறத்தை அவ்வளவாக மாசுப்படுத்தாத எரிபொருளைப் பயன்படுத்தும் கார்களுக்கு மாற்றப்படும். 2040ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டுக்குள் அரசாங்க அமைப்புகளின் புதிய கார்கள் புகை வெளியேற்றாத கார்களாக இருக்க வேண்டும்.

அர­சாங்­கம் கொண்­டி­ருக்­கும் இந்த இலக்­கு­கள் குறித்து நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று அறி­வித்­தார். GreenGov.SG எனும் திட்­டத்­தின்­கீழ் கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­காக அர­சாங்­கம் எடுக்க இருக்­கும் பல்­வேறு திட்­டங்­களை அமைச்­சர் ஃபூ மேற்­கோள்­காட்­டி­னார்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு ஏற்­பாடு செய்த சுற்­றுப்­பு­றக் கருத்­த­ரங்­கில் திரு­வாட்டி ஃபூ இது­கு­றித்து பேசி­னார்.

ஏற்­கெ­னவே நிர்­ண­யிக்­கப்­பட்­ட­தற்கு முன்­ன­தா­கவே கரிம வெளி­யேற்­றத்­தைப் பொதுத் துறை குறைக்­கும் என்று கடந்த மார்ச் மாதத்­தில் அவர் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

2025ஆம் ஆண்­டுக்­குள் அதி­க­பட்ச கரிம வெளி­யேற்­றம் குறித்து அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான அலு­வ­ல­கங்­களும் பொதுக் கட்­ட­மைப்­பு­களும் இலக்கு கொண்­டுள்­ளன. பாரிஸ் ஒப்­பந்­தப்­படி, 2030ஆம் ஆண்­டுக்­குள் அதி­க­பட்­சம் 65 டன் கரிம வெளி­யேற்­றம், 2050ஆம் ஆண்­டுக்­குள் 33 டன் வெளி­யேற்­றம் ஆகி­யவை சிங்­கப்­பூ­ரின் இலக்­கா­கும். அதன் பிறகு கரிம வெளி­யேற்­றம் அறவே இல்­லா­மல் செய்­வதே சிங்­கப்­பூ­ரின் குறிக்­கோ­ளா­கும்.

2017ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் 52.5 மில்­லி­யன் டன் கிரீன்­ஹ­வுஸ் வாயு­க்களை வெளியேற்றியது. இது உல­க­ளா­விய கரிம வெளி­யேற்­றத்­தில் 0.1 விழுக்­கா­டா­கும்.

2030ஆம் ஆண்­டுக்­குள் எரி­சக்தி, தண்­ணீர் பயன்­பாட்­டை­யும் கழி­வு­க­ளின் அள­வை­யும் குறைக்க பொதுத் துறை சவால்­மிக்க இலக்­கு­களை வகுக்­கும் என்று திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளின் சரா­ச­ரி­யை­விட எரி­சக்தி மற்­றும் தண்­ணீர் பயன்­பாடு 10 விழுக்­காடு குறைக்­கப்­படும். பொதுத் துறை வீசும் கழி­வுப்­பொ­ருள் 30 விழுக்­காடு குறைக்­கப்­படும்.

உண­வ­கங்­கள் உள்ள பொதுத் துறை கட்­ட­டங்­கள் 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து உண­வுக் கழி­வுப் பொருட்­க­ளை மற்ற கழி­வுப் பொருட்­க­ளி­லி­ருந்து பிரித்து அவற்றை மறு­சு­ழற்சி செய்ய அனுப்பிவைக்­கும்.