சமூக அளவில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா

2 mins read
a36aa95a-5171-44a0-97fb-904945bafda8
-

சிங்­கப்­பூர் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி மேலும் 26 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 62,718ஆக அதி­க­ரித்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட 26 பேரில் எட்டுப் பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

இவர்­களில் ஐவர் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள்.

எஞ்­சி­யுள்ள மூவ­ருக்­கும் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் தொடர்பு இல்லை.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த 18 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­தும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த 18 பேரில் 13 பேருக்கு சிங்­கப்­பூர் வந்­த­தும் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

எஞ்­சிய ஐவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவர்­க­ளி­டம் கொவிட்-19 அறி­கு­றி­கள் தென்­பட்­டன.

இந்­நி­லை­யில், மேலும் ஒரு­வ­ருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­ட­தாக நேற்று முன்­தி­னம் உறுதி செய்­யப்­பட்­டது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த ஏழு பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக நேற்று முன்­தி­னம் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது 20 கொவிட்-19 குழு­மங்­கள் உள்­ளன. ஒவ்­வொரு குழு­மத்­தி­லும் பாதிக்­கப்­பட்ட மூன்று பேரி­லி­ருந்து 24 பேர் உள்­ள­னர்.

கடந்த 28 நாட்­க­ளாக புதி­தாக யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­த­தால் இரண்டு இடங்­கள் இனி கொவிட்-19 குழு­மங்­க­ளா­கக் கரு­தப்­ப­டாது.

தற்­போது கொவிட்-19 கார­ண­மாக 77 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோ­ரின் உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் அவர்­களை மருத்­து­வர்­கள் உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­வ­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இரு­வ­ரி­ன் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­படுகிறது.

அவர்­க­ளுக்­குத் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

ஆறு பேருக்கு உயிர்­வா­யு சுவாசச் சாதனம் பொருத்­தப்­பட வேண்­டி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.