சூதாட்ட சட்ட மாற்றங்கள்: பொதுமக்களிடம் ஆலோசனை

சூதாட்ட சட்ட மாற்றங்கள்: பொதுமக்களிடம் ஆலோசனை

2 mins read
4cab52b5-e7fe-4e12-8636-f0326e2e24f1
இயந்திரத்தில் காசு போட்டு ­பொம்மையைப் பரிசாக எடுப்பதுகுழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று. இதுபோன்ற விளையாட்டுகளில் சூதாட்டக் கூறுகள் உள்ளதால் அவற்றின்பரிசுகளுக்கு வரம்பு விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சூதாட்­டச் சட்­டங்­களை இவ்­வாண்டு பிற்­ப­கு­தி­யில் மாற்­றப்­போ­வ­தா­கக் கூறி­யுள்ள உள்­துறை அமைச்சு அது பற்றி கருத்­துத் தெரிவிக்கும்படி பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கிறது.

இணை­ய­வழி சூதாட்­டம், வீட்­டில் குடும்­பத்­தி­ன­ரோ­டும் நண்­பர்­க­ளோ­டும் சூதா­டு­வது, சூதாட்டக் கூறுகள் உள்ள விளை­யாட்­டு­கள் உள்­ளிட்­ட­வற்­றில் மாற்­றங்­களை அமைச்சு முன்­மொ­ழிந்­துள்­ளது.

இணை­யத்­தில் புதி­தாக உரு­வா­கும் சூதாட்­டத் தொழில்­நுட்­பங்­க­ளை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் சூதாட்­டத்­தின் வரை­ய­றையை மாற்றி அமைக்க அமைச்சு பரிந்­துரை செய்­துள்­ளது.

அத்­து­டன், விளை­யாட்­டுக் கூடங்­களில் இயந்­தி­ரத்­தில் விளை­யா­டு­வது, காசு போட்டு விளை­யாட்டுப் பொம்­மையை இயந்­தி­ரத்­தில் எடுப்­பது, மர்­மப் பெட்­டி­கள் போன்ற சூதாட்­டக் கூறு­கள் உள்ள விளை­யாட்­டு­க­ளுக்­கான பரி­சுத் தொகை அதி­க­பட்­சம் $100ஆக இருக்க வேண்­டும் என்று அமைச்சு முன்­மொ­ழிந்­துள்­ளது. அதி­க­வி­லை­யுள்ள பரி­சு­க­ளால் கவ­ரப்­பட்டு சூதாட்­டத்­தில் ஈடு­படும் சாத்­தி­யத்­தைக் குறைக்க அது உத­வும்.

இணை­யத்­தில் விளை­யா­டிப் பெறும் மெய்­நி­கர்ப் பொருட்­களை வெளி­யி­டத்­தில் கொடுத்து அதற்கு பதில் பணத்தை அல்­லது பண­ ம­திப்­புள்ள பொருட்­க­ளைப் பரி­சாகப் பெறுவதைத் தடுக்­க­வும் வகை யிலும் சட்­டம் மாற்­றப்­படும்.

மேலும் புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தில் வீட்­டில் குடும்­பத்­தோ­டும் நண்­பர்­க­ளோ­டும் சூதா­டு­வது அனு­ம­திக்­கப்­படும். அது சமூ­கத்­தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வழக்­கம் என்­ப­தை­யும் அத­னால் சட்ட ஒழுங்­குக்குப் பெருமளவு பாதிப்பு இல்லை என்­ப­தை­யும் ஏற்­றுக்­கொள்­­வ­தாக அமைச்சு கூறி­யது. ஆனால் இணை­யத்­தில் குடும்­பத்­தோ­டும் நண்­பர்­ க­ளோ­டும் சூதாடுவது அனு­ம­திக்­கப்­ப­டாது. அத்­து­டன், வீட்­டில் சூதா­டு­வ­தைப் பயன்­ப­டுத்தி சூதாட்­டக் கும்­பல்­க­ளுக்கு எதி­ராக கடும் சோத­னை­களும் தண்­ட­னை­களும் அறி­மு­கம் செய்­யப்படும் என்­றும் உள்­துறை அமைச்சு கூறி­யது.

மேலும், பல்­வேறு சூதாட்­டச் சட்­டங்­க­ளின் கீழ் விதிக்­கப்­படும் அப­ரா­தங்­கள் சீர­மைக்­கப்­படும்.

சூதாட்­டச் சட்­டங்­களை சிங்­கப்­பூர் கடு­மை­யா­க­வும் அதே நேரத்­தில் நடை­மு­றைக்கு ஏற்ற வகை­யி­லும் அணு­கு­வ­தாக அமைச்சு கூறி­யது. எல்­லா­வி­த­மான சூதாட்­டத்­துக்­கும் தடை செய்­வது, சட்­ட­மீ­றல்­க­ளைத்தான் அதி­க­மாக்­கும் என்­றும் அது குறிப்­பிட்­டது.

சட்­டத்­தி­ருத்­தங்­கள் பற்­றிய தங்­கள் கருத்­து­களை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்­குள் பொது­மக்­கள் அமைச்சுக்கு அனுப்பலாம்.