முன்னாள் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு உத்திகள்: பொதுமக்கள் கருத்துரைக்கலாம்

முன்னாள் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு உத்திகள்: பொதுமக்கள் கருத்துரைக்கலாம்

2 mins read
cfb59efe-b2d1-4bfc-84fb-ac297ed6fcc7
-

முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் சரி­யான பாதை­யில் செல்­ல­வும் குற்ற வழிகளுக்குத் திரும்­பா­தி­ருக்­க­வும் உத­வும் உத்­தி­கள் தொடர்பில் பொது­மக்­கள் கருத்துரைக்க நேற்று தொடங்­கிய மூன்று நாள் மெய்­நி­கர் உச்­ச­நிலை மாநாடு வாய்ப்­ப­ளித்­து உள்­ளது.

'கேர்' எனப்­படும் முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் மறு­வாழ்­விற்­கான சமூ­கச் செயல்­பாட்­டு அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இம்­மா­நாட்­டில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், ஆசிரி­யர்­கள் உட்­பட ஏறக்­கு­றைய 500 பேர் பங்­கேற்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு, அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர்க்கு ஆத­ரவு வழங்கு­தல் உள்­ளிட்ட அம்­சங்­கள் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெறும்.

மாநாட்­டின் அறி­முக நிகழ்ச்­சி­யில் தொடக்­க­வுரை ஆற்­றிய உள்­துறை இரண்­டாம் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, இப்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் வேலை­வாய்ப்பு­க­ளை­யும் தாண்டி முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர்க்­கு­மான ஆத­ரவை வலுப்­படுத்­தும் திட்­டங்­கள் குறித்­துப் பேசி­னார்.

"கடந்த ஓராண்­டு­கா­லம் நம் அனை­வர்க்­கும் சவால்­மிக்­க­தாக இருந்து வரு­கிறது. கொவிட்-19 பர­வல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள சவால்­களுக்கு இடையே, முன்­னாள் குற்­ற­வா­ளி­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் தங்­க­ளது மறு­வாழ்வு, சமூ­கத்­து­ட­னான ஒருங்­கி­ணைப்­புப் பய­ணத்­தைத் தொடர வேண்­டும்," என்­றார் திரு­வாட்டி டியோ.

"குற்­றப் பாதைக்­குத் திரும்­பா­மல் தடுக்கும் வகை­யில், முன்­னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ரவு வழங்கு­வது 'கேர்' அமைப்­பின் அடுத்த இலக்கு. இப்­போது, முன்­னாள் குற்­ற­வா­ளி­களில் பத்­தில் நான்கு பேர் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட ஐந்­தாண்­டு­க­ளுக்­குள் மீண்­டும் சிறைக்­குத் திரும்­பி­வி­டு­கின்­றனர். அவர்­கள் மீண்­டும் குற்­றம் புரி­வ­தைத் தடுக்க நாம் இன்­னும் அதி­கம் செய்ய வேண்­டும்," என்று தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரு­மான திரு­வாட்டி டியோ கூறி­னார்.

மீண்­டும் குற்­றப் பாதைக்­குத் திரும்­பும் முன்­னாள் குற்­ற­வா­ளி­களின் விகி­தத்­தைக் குறைக்க 'கேர்' அமைப்பு கவ­னம் செலுத்தி­வரும் முக்­கிய அம்­சங்­க­ளை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

சிறை­யில் இருக்­கும்­போ­தும் அதன்­பின்­னும் கைதி­க­ளுக்­கான மறு­ஒ­ருங்­கி­ணைப்­பை­யும் ஆத­ர­வை­யும் வலுப்­ப­டுத்­தும்­வி­த­மாக, சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருள் தடுப்­புச் சங்­கம், தொழி­லி­யல், கூட்­டு­றவு சேவை­கள் சங்­கம் ஆகிய இரு பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து கடந்த ஜன­வ­ரி­யில் ஒரு திட்­டம் அறி­முகப்­படுத்­தப்­பட்­டது.

'பிரேக் த சைக்­கிள் எஸ்ஜி', 'கேன்­வாஸ் ஆர்ட்ஸ்' போன்ற தன்­னார்­வக் குழுக்­களில் இணை­யும்­படி முன்­னாள் குற்­ற­வா­ளி­களை ஊக்­கு­விப்­பதே அத்­திட்­டத்­தின் நோக்­கம்.

முன்னதாக, சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் சிறைச்­சா­லைப் பள்ளி­யில் வழங்கிவரும் பட்­டப் படிப்­பு­க­ளுக்­குத் தகு­தி­பெறும் சிறைக்கைதி­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கும் வித­மாக, மஞ்­சள் நாடா நிதி, சிங்­கப்­பூர் சீனக் குல­ம­ர­புச் சங்­கக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­று­டன் கடந்த பிப்­ர­வ­ரி­யில் 'கேர்' அமைப்பு ஓர் ஒத்­து­ழைப்பைச் செய்துகொண்டது.

அதன்­படி, உயர்­கல்­வியைத் தொடரும் கைதி­களுக்கு 100% வரை கல்வி உதவித்­தொகை வழங்­கப்­படு­கிறது. இந்த ஆண்டு ஏப்­ரல் நில­வ­ரப்­படி, 11 கைதி­க­ளுக்கு அத்தகைய ஆத­ரவு வழங்­கப்­பட்டு வரு­கிறது.