தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதியன்று இஸ்தானா அதிபர் மாளிகளை வளாகத்தில் மீண்டும் பொது வரவேற்பு தினம் நடைபெறவுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தொடர்ந்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இஸ்தானா மாளிகை வளாகம் பொதுமக்களுக்கு மூடப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியன்று மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலை நடப்புக்கு வந்த பிறகு திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மே 13ஆம் தேதியன்று இஸ்தானாவிற்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டுகளை வைத்திருப்போர் மட்டும் அடுத்த மாதம் ஒன்றாம் தேதியன்று அங்கு செல்லமுடியும். கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளுடன் பொது வரவேற்பு தினம் நடைபெறும்.
கேளிக்கை நடவடிக்கைகள், உணவு, பானக் கடைகள் உள்ளிட்டவை இடம்பெறாது.