இளம் பெண்களுடன் ஆடவர் பாலியல் உறவு

இளம் பெண்களுடன் ஆடவர் பாலியல் உறவு

1 mins read
e1956dea-f1b1-4d88-a401-9393fa527346
-

குறைந்த வய­து உள்ள இரண்டு பெண்­க­ளு­டன் பாலியல் உறவு ஓர் ஆட­வர் ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

அந்­தப் பெண்­க­ளைக் கர்­ப்பமாக்­கி­ய­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

சம்­பந்­தப்­பட்ட பெண்­களில் ஒரு­வ­ருக்கு அப்­போது வயது 12. அவர் பின்­னர் கர்ப்­பத்­தைக் கலைத்­துக்­கொண்­டார்.

மற்­றொரு பெண்­ணுக்கு அப்­போது வயது 15.

அவர் குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்து வளர்க்­கி­றார். தற்­போது 20 வய­தான ஆட­வர், சென்ற ஆண்டு வேறொரு 18 வயது பெண்ணை அடித்­தி­ருக்­கி­றார்.

அந்­தப் பெண்­ணுக்­கும் அவ­ருக்­கும் பிறந்த ஒரு குழந்தை உள்­ளது. மூன்று பெண்­களும் ஆட­வ­ரின் காத­லர்­க­ளாக இருந்­த­வர்­கள்.

தற்­போது மூவ­ரும் அவ­ரு­டன் தொடர்­பில் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ர­ரான அந்த ஆட­வர், குறைந்த வயது பெண்களுடன் பாலியல் உறவு வைத்­துக்­கொண்­ட­தா­கப் பதி­வான நான்கு குற்­றச்­சாட்­டு­களையும் 18 வயது பெண்ணை அடித்­த­தா­கப் பதி­வான ஒரு குற்­றச்­சாட்­டை­யும் ஒப்­புக்­கொண்­டார்.

2017க்கும் சென்ற ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அவர் குற்­றங்­க­ளைப் புரிந்­தார்.

தீர்ப்பு வழங்­கும்­போது குறைந்த வயது பெண்­க­ளு­டன் பாலியல் உறவு வைத்­துக்­கொண்­ட­தன் தொடர்­பில் அவர் மீது பதிவான மேலும் 15 குற்­றச்­சாட்­டு­களும் கருத்­திற்­கொள்­ளப்­படும்.

இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று தீர்ப்பு வழங்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 14 வய­துக்கு உட்­பட்­ட­வ­ரு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்ட ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டும் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு 20 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி அல்­லது மூன்­றில் இரண்டு தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.