ஒழுக்கக்கேடான நடத்தை தொடர்பில் 20 பேர் கைது

ஒழுக்கக்கேடான நடத்தை தொடர்பில் 20 பேர் கைது

1 mins read
2898780f-1e9f-40d5-9918-ce6d0333140f
-

ஒழுக்­கக்­கே­டான நடத்­தை­யின் சந்­தே­கத்­தில் 20 பெண்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் 20க்கும் 34க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் என்று போலி­சார் நேற்­றி­ரவு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

தற்­போது உணவு, பானக் கடை­க­ளா­கச் செயல்­படும் மூன்று கேடிவி மன­ம­கிழ் கூடங்­களில் பாலி­யல் ரீதி­யான நட­வ­டிக்­கை­களில் இந்­தப் பெண்­கள் ஈடு­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. இவர்­கள் கொரிய, மலே­சிய, தாய்­லாந்து, வியட்­னாம் நாட்­ட­வர் என்­றும் கூறப்­பட்­டது.

சௌத் பிரிட்ஜ் ரோடு, சிலிகி ரோடு, கேலாங் ரோடு ஆகிய பகு­தி­களில் சட்­ட­வி­ரோ­தச் செயல்­க­ளுக்கு எதி­ராக அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் மேற்­கொண்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­யின்­போது 20 பேரும் சிக்­கி­னர்.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வடிக்­கை­கள்) (கட்­டுப்­பாட்டு ஆணை) விதி­மு­றை­கள் 2020ன் கீழ் மூன்று கேடிவி கூட நிறு­வ­னங்­கள் மீது விசா­ர­ணை­யும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கூடங்­களில் பெண்­க­ளைக் கொண்டு உப­ச­ரிப்­புச் சேவை வழங்­கி­யி­ருந்­தது தொடர்­பில் இவ்­வி­சா­ரணை நடந்து வரு­கிறது.

ஒரு கேடிவி கூடத்­தில் பகடை விளை­யாட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது. கொவிட்-19 விதி­மு­றை­கள்­படி இது­வும் தடை­செய்­யப்­பட்ட ஒரு நட­வ­டிக்­கை­யா­கும். பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­களை இவ்­வாறு மீறிய நிறு­வ­னங்­க­ளின் உணவு உரி­மத்தை சிங்­கப்­பூர் உணவு அமைப்பு ரத்து செய்­ய­லாம்.

சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக மனமகிழ்க் கூடங்­களில் போலி­சார் தங்­க­ளின் சோதனை நட­வ­டிக்­கை­களை அதி­கப்­ப­டுத்த உள்­ள­தாகக் கூறப்பட்டது.