இனவாதம்: நிதானத்துடன் எதிர்க்கவேண்டும்

இனவாதம்: நிதானத்துடன் எதிர்க்கவேண்டும்

1 mins read
b449c658-1a20-4dae-aa54-925e8018bc61
-

இன­வா­தச் செயல்­கள் நிக­ழும்­போது, அவற்­றைத் தவறு என்று சுட்­டிக்­காட்டி எதிர்­கொள்­வது முக்­கி­யம். எனினும் உரை­யா­ட­லைத் தொட­ரும் வகை­யில் அத்­த­கைய எதிர்­கொள்­தல் ஆக்­க­க­ர­மாக இருக்­க­வேண்­டும் என்று கலா­சார, சமூக, இளை­யர்த்­துறை அமைச்­சர் திரு எட்­வின் டோங் கூறி­னார்.

நேற்­றைய கருத்­த­ரங்­கில் பேசிய அவர், அண்­மை­யில் இன­வா­தக் கருத்­து­களை எதிர்த்த ஐஸ் கிரீம் கடை உரி­மை­யா­ளர் திரு டேவ் பிர­காஷை எடுத்­துக்­காட்­டா­கச் சுட்­டி­னார்.

திரு பிரகாஷ் தமது சீனக் காத­லி­யு­டன் இருந்­த­தைப் பார்த்து பல­து­றைத் தொழில்­கல்­லூரி விரி­வு­ரை­யா­ளர் டான் பூன் லீ இன­வா­தத் கருத்­து­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தார். அந்தச் சம்­ப­வத்­தைக் காணொ­ளி­யாகப் பதி­வு­செய்த திரு பிர­காஷ், அது தம் மன­தைப் புண்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­யிந்­தார்.

திரு பிர­காஷ் அச்சூழ்­நி­லையை மரி­யா­தை­யா­க­வும் நிதா­ன­மா­க­வும் கையாண்­டார் என்­றும் மற்­ற­வர்­கள் அது பற்றி உரை­யாட களத்தை ஏற்­ப­டுத்­தித் தந்­தார் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

பழி­வாங்கும் நோக்கம் இல்லாமல் அப்­பி­ரச்­சினை பற்றி சிங்­கப்­பூ­ரில் உரை­யா­டல் தேவை என்று நினைத்து திரு பிரகாஷ் செயல்பட்டதை திரு டோங் சுட்டிக்காட்டினார்.