தோ பாயோ உணவங்காடி நிலையம் தற்காலிகமாக மூடல்

தோ பாயோ உணவங்காடி நிலையம் தற்காலிகமாக மூடல்

2 mins read
2a39cce7-6bc4-4ff8-bded-5b1f606926ed
தனிநபர் பாதுகாப்பு அங்கி அணிந்தபடி, புளோக் 75 லோரோங் 5 தோ பாயோவில் அமைந்துள்ள உணவங்காடி நிலையத்தில் நேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கேடிவி மனமகிழ் மன்றத்திற்குச் சென்றுவந்த உணவுக்கடை உதவியாளர்க்குத் தொற்று

புளோக் 75 லோரோங் 5 தோ பாயோ­வில் அமைந்­துள்ள உண­வங்­காடி நிலை­யம் தற்காலிகமாக மூடப்­பட்டு, நேற்­றுக் காலை­யில் முழு­வ­து­மா­கத் தூய்­மைப்­ப­டுத்­தும் பணி­கள் இடம்­பெற்­றன.

சென்ற வார இறு­தி­யில் கேடிவி மன­ம­கிழ் மன்­றத்­திற்­குச் சென்று வந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் உண­வுக்­கடை உத­வி­யா­ளர் ஒரு­வர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, இந்த நட­வடிக்கை இடம்­பெற்­றது.

அறு­வர் அடங்­கிய குழு­வி­னர் தனி­ந­பர் பாது­காப்பு அங்கி அணிந்­த­படி கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் அங்கு கிரு­மி­நா­சினி தெளிப்­பி­லும் மேசை, இருக்­கை­க­ளைத் துடைக்­கும் பணி­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர்.

என்­டி­யுசி ஃபுட்ஃபேர் நிறு­வ­னத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் அந்த உண­வங்­காடி நிலை­யத்­தில் 36 கடை­கள் உள்­ளன.

கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது குறித்து நேற்று முன்­தினம் பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள் கூறி­னர்.

பொருள்­களையும் பாத்­தி­ரங்­களையும் மூட்டை கட்ட மூன்று மணி நேர காலக்­கெடு தரப்­பட்­ட­தா­க­வும் தங்­களை 14 நாள்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­காக எச்­சில்/சளி மாதி­ரிப் பரி­சோ­த­னை­யா­ளர் நேற்­றுக் காலை­யில் உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள் சில­ரது வீடு­க­ளுக்கு நேரில் சென்­ற­னர்.

"திடீ­ரென அறி­விப்பு வெளி­யா­ன­தால் மொத்த உண­வங்­காடி நிலை­ய­மும் களே­ப­ர­மா­கி­விட்­டது. எல்­லா­ரும் பதற்­றத்­து­டன் மூட்டை கட்­டி­னர்," என்­றார் அந்த உண­வங்­காடி நிலை­யச் சங்­கத்­தின் தலை­வர் டான் பூன் சுவான், 50.

இத­னி­டையே, நேற்று மாலை 5.30 மணி­ய­ள­வில் சீன உணவை வாங்­கிச் செல்­வ­தற்­காக அந்த உண­வங்­காடி நிலை­யத்­திற்கு வந்­தார் தோ பாயோ லோரோங் 4 புளோக் 58ல் வசித்துவரும் திரு சேகர் கோபால்­சாமி, 59. அங்கு வந்­த­ பி­றகே அந்நிலை­யம் மூடப்­பட்ட விவ­ரம் அவ­ருக்­குத் தெரி­ய­வந்­தது.

ஆயி­னும், இரு வாரங்­க­ளுக்கு ஒரு­மு­றையே அங்கு உணவு வாங்க வரு­வ­தால் தமக்கு அதி­கம் பாதிப்பு இருக்­காது என்­றார் அவர்.

அக்­கம்­பக்­கத்­தில் வசிக்­கும் முதி­ய­வர்­களில் அதி­க­மா­னோர் அந்த உண­வங்­காடி நிலை­யத்­திற்கு அடிக்­கடி செல்­வர் என்­ப­தால் அத­னைத் தற்­கா­லி­க­மாக மூடி­யது வர­வேற்­கத்­தக்­கது என்­றார் தோ பாயோ லோரோங் 5ல் வசித்­து­வ­ரும் திரு­மதி ஜமீலா அப்­துல்லா, 63.

முன்­னர் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து அந்த உண­வங்­காடி நிலை­யத்­தில் பானம் அருந்­து­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார் திரு த.இளங்­கோ­வன், 62.

ஆனால், கொவிட்-19 கிரு­மித்­தொற்று தீவி­ர­மா­ன­தி­லி­ருந்து, அது குடும்­பத்­தி­ன­ரைப் பாதித்­து­வி­டக்­கூ­டாது என்ற அக்­க­றை­யில், இப்­போது அங்கு செல்வதைக் குறைத்­துக்­கொண்டு, பெரும்­பா­லும் வீட்­டி­லேயே இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

லோரோங் 5 புளோக் 48 குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான இல்­லத்­த­ரசி திரு­மதி கோமதி ராம­லட்­சுமி, 49, தாம் பெரும்­பா­லும் வீட்­டில் சமைப்­ப­தால் உண­வங்­காடி நிலை­யத்­திற்­குப் போவ­தற்­கான தேவை இல்லை என்­றார்.

அத்­து­டன், தோ பாயோ வட்­டா­ரத்­தைச் சுற்றி பல உண­வங்­காடி நிலை­யங்­கள் இருப்­ப­தால் அந்த நிலை­யத்­தைத் தற்­கா­லி­க­மாக மூடி­யதால் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குப் பெரிதாக பாதிப்பு இராது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கூடு­தல் செய்தி:

ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்