பிசிஎஃப் பாலர் பள்ளியில் இரண்டு குழந்தைகளுக்குத் தொற்று

பிசிஎஃப் பாலர் பள்ளியில் இரண்டு குழந்தைகளுக்குத் தொற்று

2 mins read
9683d977-4949-4530-a537-faac8dee3e32
பிற வகுப்புகள் நடைபெறாவிடினும் கைக்குழந்தைப் பராமரிப்புச் சேவை இன்றுமுதல் தொடங்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரே வீட்­டைச் சேர்ந்த இரு குழந்­தை­க­ளுக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, சுவா சூ காங்­கில் உள்ள ஒரு பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் நிலையம் மூடப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளு­டன் அண்­மை­யில் நிலையத்­தில் இருந்த குழந்­தை­களும் பணி­யாளர்­களும் நேற்று முன்­தி­னம் புதன்­கி­ழ­மை­யில் இருந்து இம்­மா­தம் 26ஆம் தேதி­வரை ஈட்­டப்­படா விடுப்­பில் (leave of absence) இருப்­பர் என்று தலைமை நிர்­வாக முதல்­வர் ஜனிகா இங், குழந்­தை­களின் பெற்­றோர்­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

கீட் ஹோங் குளோஸ், புளோக் 801ல் அமைந்­துள்ள 'பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் அட் பிரிக்­லேண்ட்' என்ற அந்நிலையம், நேற்று முன்­தி­ன­மும் நேற்­றும் மூடப்­பட்­டது. அவ்­விரு நாள்­க­ளி­லும் அங்கு சுத்­தப்­ப­டுத்­தும் பணி­களும் கிரு­மி­நா­சினி தெளிக்­கும் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. தொற்­று­களின் தட­ம­றி­யும் பணி தொடர்­கிறது.

அந்நிலையத்தின் பாலர்­நிலை ஒன்­றில் (கே1) பயி­லும் ஒரு குழந்­தைக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தாக நேற்று முன்­தி­னம் மாலை­யில் சுகா­தார அமைச்சு, அந்நிலையத்­திற்­குத் தக­வல் தெரி­வித்­தது. பின்­னர் அந்நிலையத்தின் மழ­லை­யர் வகுப்­பில் பயி­லும் இன்­னொரு குழந்­தை­யை­யும் கொரோனா தொற்­றி­யது மறு­நாள் காலை­யில் உறு­திப்­படுத்­தப்­பட்­டது.

அவ்­விரு குழந்­தை­களும் கடைசி­யாக கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அந்நிலையத்­திற்­குச் சென்­றி­ருந்­த­னர்.

ரக­சி­யத்­தன்மை கார­ண­மாக அவ்­விரு குழந்­தை­கள் பற்­றிய விவ­ரங்­கள் வெளி­யி­ட­வில்லை. பணி­யா­ளர்­கள், குழந்­தை­கள் அனை­வ­ரது பாது­காப்­பை­யும் உறுதி­செய்ய அந்நிலையம், உரிய அமைப்­பு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்நிலையத்­தில் பயி­லும் குழந்­தை­க­ளின் பெற்­றோர்­க­ளைச் சுகா­தார அமைச்சு தொடர்­பு­கொள்­ளக்­கூ­டும் என்று திரு­வாட்டி இங் சொன்­னார்.

இன்­று­மு­தல் அந்நிலையத்­தில் கைக்­கு­ழந்­தைப் பரா­ம­ரிப்பு சேவை மீண்­டும் தொடங்­க­வுள்­ளது. மற்ற வகுப்­பு­கள் இம்­மா­தம் 27ஆம் தேதி­யில் இருந்து தொடங்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தங்­கள் பிள்­ளை­க­ளின் உடல்­நலத்­தைக் கண்­கா­ணிக்­கும்­ப­டி­யும் உடல்­ந­ல­மில்­லா­மல் போனால் மருத்­து­வரை நாடும்­ப­டி­யும் பெற்­றோர்­கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக திரு­வாட்டி இங் கூறி­னார்.