சிங்கப்பூர் ஆயுதப் படையின் ராணுவ நிபுணத்துவப் பயிற்சியை 105 அதிகாரிகள் முடித்துள்ளனர். இவர்கள் ஆயுதப் படையின் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்.
பயிற்சியை ஒரே நேரத்தில் முடித்தவர்களில் மகன்-தந்தை இணையும் அடங்கும். 25 வயது ரோய் டானும் அவரது தந்தையான 53 வயது டான் கிம் சியோங்கும் பயிற்சியை ஒரே நேரத்தில் முடித்
தனர்.
பயிற்சியை முடித்த அதிகாரி
களிடம் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று இணையம் மூலம் பேசினார். மாறி வரும் உலகில் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவது முக்கியம் என்று திரு ஸாக்கி வலியுறுத்தினார்.
"பழைய, புதிய மிரட்டல்களி
லிருந்து நாட்டை சிங்கப்பூர் ஆயுதப் படை தற்காக்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இணையம் வழி தாக்குதல்கள், பயங்கரவாதம் ஆகியவை இவற்றில் அடங்கும்," என்றார் அவர்.
"எத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருப்பதை உறுதி செய்ய தற்காப்பில் தொடர்ந்து முதலீடு செய்யப்படுகிறது.
பயிற்சியை ஒரே நேரத்தில் முத்த ME4 ரோய் டானும் அவரது தந்தை ME4 டான் கிம் சியோங்கும் (வலது).
படம்: தற்காப்பு அமைச்சு

