மீண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

மீண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

1 mins read
db070cc5-f16b-4753-9440-e98a52a010d3
-

மீண்­டும் நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க கோன்­கோர்ட் இன்­டர்­நே­ஷ­னல் மருத்­து­வ­

ம­னைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன் செயல்­பாட்­டில் குறை­யா­டு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தால் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று ஆடம் சாலை­யில் உள்ள அந்த மருத்­து­வ­

ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அறை போன்ற முக்­கிய இடங்­களில் உயிர் காக்­கும் சாத­னங்­களும் நோயா­ளி­

க­ளுக்­குத் தேவை­யான பொருட்­களும் இல்­லா­தது அல்­லது முறையாகப் பரா­ம­ரிக்­கப்­ப­டா­தது வெளிச்­சத்­துக்கு வந்­தது.

இதை­ய­டுத்து அந்த மருத்­து­வ­மனை அனைத்து சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளை­யும் நிறுத்த வேண்­டும் என சுகா­தார அமைச்சு உத்­த­ர­விட்­டது.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள், மருந்­த­கங்­கள் சட்­டத்­தின்­கீழ் உள்ள தேவை­கள் பூர்த்தி செய்­யப்­ப­டு­வது உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து கடந்த மாதம் 16ஆம் தேதி­யி­லி­ருந்து மீண்­டும் நோயாளி­ க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க கோன்­கோர்ட் இன்­டர்­நே­ஷ­னல் மருத்­து­வ­ம­னைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

விதி­மு­றைக்கு உட்­பட்டு செயல்­ப­டத் தவ­றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு $20,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

அது­மட்­டு­மல்­லாது, மருத்­து­வச் சேவை வழங்க தேவை­யான உரி­மத்­தை­யும் அவை இழக்­கக்­கூ­டும். தற்­போது கோன்­கோர்ட் இன்­டர்­நே­ஷ­னல் மருத்­து­வ­ம­னைக்கு வழங்­கப்­பட்­டுள்ள உரி­மம் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு செல்­லுப்­ப­டி­

யா­கும்.