புதிதாக 32 பேர்; கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்தில் இதுவரை 120 பேர் பாதிப்பு

புதிதாக 32 பேர்; கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்தில் இதுவரை 120 பேர் பாதிப்பு

2 mins read
29a362e4-8541-42c0-a15b-c1f897a33a15
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி உள்­ளூ­ரில் 53 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இவர்­களில் 32 பேர் கேடிவி கிரு­மித்­தொற்று குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மேலும், நேற்று அறி­விக்­கப்­பட்ட 53 பேரில் 24 பேர் ஏற்­கெ­னவே நோய் தொற்­றி­ய­வர்­க­ளு­ட­னும் தனி­மை­யில் இருந்­த­வர்­க­ளு­ட­னும் தொடர்­பில் இருந்­த­வர்­கள்.

ஒன்­பது பேருக்கு எவ்­வாறு கிருமி தொற்­றி­யது என்று தெரி­ய­வில்லை. பரி­சோ­தனை மூலம் அவர்­க­ளி­டம் தொற்று இருப்­பது தெரிய வந்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூர் வந்த எட்­டுப் பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் நேற்று அறி­விக்­கப்­பட்­டது. இவர்­களில் இரு­வ­ரி­டம் தொற்று இருப்­பது இங்கு வந்­தி­றங்­கி­ய­தும் கண்­ட­றி­யப்­பட்­டது. எஞ்­சிய அறு­வ­ரும் இங்கு வந்­தது முதல் கட்­டா­யத் தனி­மைத் உத்­த­ர­வில் வைக்­கப்­பட்­டி­ருந்த வேளை­யில் அவர்­க­ளி­டம் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக அமைச்சு தனது முதற்­கட்ட அறி­விக்­கை­யில் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் நேற்று மொத்­த­மாக 61 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இத­னை­யும் சேர்த்து இங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 62,913க்கு அதி­க­ரித்­தது.

கேடிவி கர­வோக்கே தொற்­றுக் குழு­மத்­தில் ஏற்­கெ­னவே 34 பேரி­டம் கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக வியா­ழக்­கி­ழமை இர­வில் அமைச்சு தெரி­வித்­தது. புதி­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­ட­வர்­க­ளை­யும் சேர்த்து இந்­தக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 120ஆக அதிகரித்துவிட்டது.

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் இங்­குள்ள 11 கேடிவி ­கூ­டங்­க­ளுக்­குச் சென்­றோ­ரி­டம் தொற்று இருப்­பது படிப்­ப­டி­யா­கக் கண்­ட­றி­யப்­பட்டு வரு­கிறது.

வியட்­னா­மில் இருந்து சமூக வரு­கை­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த உப­ச­ரிப்­புக் குழு­வி­ட­மும் அவர்­க­ளி­டம் நெருங்­கிப் பழ­கி­ய­வர்­க­ளி­ட­மும் அமைச்சு விசா­ரணை நடத்தி வரு­கிறது. இந்தக் கூ­டங்­க­ளுக்கு இக்­கு­ழு­வி­னர் அடிக்­கடி சென்­ற­தா­கத் தெரிய வந்­தது.

இத்தகைய கூடங்­களில் உப­

ச­ரிப்­புச் சேவை­கள் நடத்த தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது. மேலும் இவற்­றில் பெரும்­பா­லா­னவை தொழிலை மீண்­டும் தொடங்­கும் வகை­யில் உணவு, பானக் கடை­க­ளாக உரு­மாற்­றம் கண்­டி­ருந்­தன.

இது­போல உரு­மாற்­றம் கண்ட மூன்று கடை­களில் பாது­காப்பு நடை­முறை விதி­மீ­றல்­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவற்­றின் உரி­மம் உட­ன­டி­யா­கப் பறிக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­துள்­ளது. மேலும், விதி­மீ­ற­லுக்­காக 11 கடை­க­ளுக்­கும் 31 தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அது கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, கேடிவி கிரு­மித்­தொற்று குழு­மத்­தால் திடீ­ரென சிர­மம் எழுந்­துள்­ளது. இர­வுக்­கூட தொழில்­க­ளி­லும் நாட்­டின் பொரு­ளி­யல் மறு­தி­றப்பு திட்­டங்­க­ளி­லும் இதன் தாக்­கம் இருக்­கக்­கூ­டும் என்று தெரி­கிறது.

இந்­தத் தொற்­றுக் குழு­மத்­திற்­குச் சென்­ற­வர்­களில் பல­ரும் கிருமி தொற்­றி­யதை அறி­வ­தற்கான பரி­சோ­த­னைக்­குச் செல்­லா­த­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்

­கூ­டும் என்று பேரா­சி­ரி­யர் டியோ இக் யிங் போன்ற மருத்­துவ நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.