பணிப்பெண்யைத் துன்புறுத்திய குற்றத்துக்காக 40 வயது ஃபர்ஹா டெசீனுக்கும் அவரது கணவரான 42 வயது முகம்மது தஸ்லீமுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஃபர்ஹானுக்குக் கடந்த ஆண்டு ஓராண்டு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கணவருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
அவர்களது பணிப்பெண்ணாக இருந்த திருவாட்டி அமன்டிப் கோர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
திருவாட்டி கோரை ஃபர்ஹாவும் அவரது கணவரும் பலமுறை அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்
களுக்குக் கொடுமைகளை அனு
பவித்த திருவாட்டி கோர், சன்னல் வழியாக வெளியேறி தப்பித்தார்.
மேல்முறையீடு நிராகரிக்கப்
பட்டால் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியிருந்ததை நீதிபதி கண்ணன் ரமேஷ் சுட்டினார்.
ஃபர்ஹாவின் கணவர் நாளை மறுநாள் சிறைத் தண்டனையைத் தொடங்குகிறார்.
வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை சிறைத் தண்டனையைத் தள்ளிவைக்க ஃபர்ஹாவுக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
அதற்குள் அவரது கணவர் விடுதலை செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.
ஃபர்ஹா- தஸ்லீம் தம்பதியரின் இரு மகன்களைப் பார்த்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது மகன்களில் இருவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது.