லக்கி பிளாசா விபத்தின் வழக்கு ஒத்திவைப்பு

லக்கி பிளாசா விபத்தின் வழக்கு ஒத்திவைப்பு

1 mins read
3d123179-385f-44d3-9920-689801a7b45b
லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே நிகழ்ந்த கோர விபத்து (இடது). கைது செய்யப்பட்ட சோங் கிம் ஹோ (வலது).படங்கள்: சாவ்பாவ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

2019ஆம் ஆண்­டில் ஆர்ச்­சர்ட் சாலை­யில் இருக்­கும் லக்கி பிளாசா கடைத்­தொ­கு­திக்கு வெளியே பிலிப்­பீன்ஸ் நாட்­டைச் சேர்ந்த ஆறு பெண்­கள் மீது கார் மோதி­யது. அவர்­களில் இரு­வர் மாண்­ட­னர்.

நான்கு பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். ஆறு பெண்­களும் பணிப்­பெண்­கள்.

விபத்­துக்­குக் கார­ண­மான காரை ஓட்­டி­ய­தா­கக் கூறப்­படும் சோங் கிம் ஹோவின் வழக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அன்று வழக்­குக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும்.

மலே­சி­ய­ரான 65 வயது போங் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில­வற்றை சோங் ஏற்க மறுத்­து­விட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இது­தொ­டர்­பான தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி­ யான சோங் மீது ஆபத்­தான முறை­யில் கார் ஓட்­டி­யது தொடர்­பாக மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தப்பட்டன.