கொலைக் குற்றங்கள்; இருவர் மீது குற்றச்சாட்டு

கொலைக் குற்றங்கள்; இருவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
343a56ed-9390-40af-a7d5-dcd681f385d4
-

அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் 52 வயது ஆட­வ­ரைக் கொன்­ற­தாக வியட்­னா­மிய பெண் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­த­லின்­போது அந்­தப் பெண்­ணும் காய­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. 39 வயது நுயேன் நோக் ஜியாவ் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். நேற்று முன்­தி­னம் அதி­காலை 1 மணி அள­வில் புளோக் 562 அங் மோ கியோ அவென்யூ 3ன் ஐந்­தாவது மாடி­யில் உள்ள பொது தாழ்­வா­ரத்­தில் திரு சோய் வாங் கியூங்கை அவர் கொன்­ற­தாக நம்­பப்­ப­டு­கிறது.

நடு இர­வில் யாரோ சண்டை போட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என தக­வல் கிடைத்து அதி­கா­ரி­ கள் அங்கு விரைந்­த­போது, உட­லில் காயங்­க­ளு­டன் ஜியா­வும் திரு சோயும் வீட்­டுக்கு வெளியே கிடப்­பதை அவர்­கள் கண்­ட­னர்.

இரு­வ­ரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அதை­ய­டுத்து, திரு சோய் உயி­ரி­ழந்­தார். ஜியாவ் தொடர்­பான வழக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

திரு சோயின் முதல் மனைவி ஹாங்­காங்­கைச் சேர்ந்­த­வர் என்று அவ­ரது அண்­டை­வீட்­டா­ரான திரு­வாட்டி ஓங் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார். திரு சோய் இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­தா­க­வும் அந்­தப் பெண்­ணைக் கடந்த ஆண்­டி­லி­ருந்து பார்க்­க­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

பொங்­கோல் சென்ட்­ரல் அரு­கில் உள்ள சுமாங் வாக்­கில் 46 வயது ஆட­வர் ஒரு­வ­ரைக் கத்­தி­ யால் குத்­திக் கொன்­ற­தாக 43 வயது ஹெங் பூன் சாய் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

திரு கிம் வீ மிங்கை, புளோக் 326ஏ ஆறா­வது மாடி­யில் உள்ள வீட்­டுக்கு வெளியே சிங்­கப்­பூ­ர­ரான ஹெங் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று கொலை செய்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது. சம்­ப­வம் குறித்து கடந்த புதன்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்தை போலி­சார் அடைந்­த­போ­து ­வீட்­டுக்கு வெளியே ஹெங் கத்­திக்­குத்­துக் காயங்­க­ளு­டன் சுய­நி­னை­வின்றி கிடந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக சாங்கி சிறைச்­சா­லை­யின் மருத்­துவ நிலை­யத்­தில் ஹெங் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­ப­டு­வார்.