சிங்கப்பூர் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் பல சவால்களைச் சமாளித்து வருகிறது. பல்வேறு நடவடிக்கைகளைத் திறமைக, செம்மைக குறித்த நேரத்தில் எடுத்து வருவதன் காரணமாக நிலைமை கட்டுக்குள் இருந்து வருகிறது. இருந்தாலும் அப்போதைக்கு அப்போது ஏதோ ஒரு வழியில் தொல்லைகள், மிரட்டல்கள் தலைதூக்கி வருகின்றன.
கொரோனா கிருமி பொல்லாதது. புதிய வீரியத் துடன் வேகமாக பரவ ஏற்ற சூழலை எதிர்நோக்கி அது இன்னமும் காத்துக்கொண்டே இருக்கிறது. உருமாறி பல வடிவங்களில் அது தன் வேகத்தைக் காட்டுகிறது. அலட்சியமாக இருந்து கொஞ்சம் இடம்கொடுத்துவிட்டால் மறுபடியும் அதிவேகமாக அது பரவிவிடும்.
இப்படி நிகழும்போது அது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் படிப்படிக முன்னேறிச் செல்லும் நம்மை மறுபடியும் பல படிக்கட்டுகள் கீழே இழுத்து விட்டுவிடுகிறது, நாம் பாடுபட்டு சாதித்தவை எல்லாம் பாழாகிவிடுகின்றன.
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு எதிரான போர் சென்ற ஆண்டு தொடங்கியது முதலே பல ஏற்றஇறக்கங்கள் இருந்து வந்துள்ளன. சமூகத்தொற்று அறவே இல்லாத நிலை சாதிக்கப்பட்ட நேரத்தில் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தொற்று கிடுகிடுவென பெருகியது. அதைக் கட்டுப்படுத்த குறித்த நேரத்தில் இடைவிடா முயற்சிகள் எடுக்கப்பட்டதால் அத்தகைய விடுதிகளில் தொற்று ஒழிக்கப்பட்டது. பொருளியலை அகலத் திறந்துவிட்டு அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட இருந்த நேரத்தில் உலகில் வேறு பகுதிகளில் கொரோனா கிருமி உருமாறி மீண்டும் பரவத்தொடங்கியது.
சிங்கப்பூர் எவ்வளவோ நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதித்தும், கொவிட்-19க்கு எதிரான தன் போராட்டங்களைத் தீவிரப்படுத்திய போதிலும் எப்படியோ டெல்டா என்ற உருமாறிய கிருமி இங்கு புகுந்துவிட்டது. சமூகத்தொற்று தலைகாட்டியது.
பல தொற்றுக் குழுமங்கள் உருவாயின. சாங்கி, புக்கிட் மேரா குழுமங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவை டெல்டா கிருமி எந்த அளவுக்கு வேகமாகப் பரவக்கூடியவை என்பதை உணர்த்தின.
என்றாலும் பரிசோதனை, தடுப்பூசி, தடமறிதல் போன்ற உத்திகளை முடுக்கிவிட்டு அவற்றையும் கட்டுப்படுத்த அரசாங்கம் படுவேகமாக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தது. அவற்றின் விளை வாக நிலைமை கொஞ்சம் மேம்பட்டு கட்டுப்பாடுகள் ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டன.
இத்தகைய ஒரு நேரத்தில்தான் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு சமூகத்தில் ஒருநாளில் ஆக அதிகம் பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்தது. அதற்கு கேடிவி கேளிக்கை இடங்களும் உபசரிப்பு ஊழியர்களும் சம்பந்தப்பட்ட தொற்றுக் குழுமமே முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. கேடிவி மனமகிழ் நிலையங்களை மூட ஓராண்டுக்கு முன் உத்தரவிடப்பட்டது.
இருந்தாலும் அவை உணவு, பான நிலையங்களாகச் செயல்பட விண்ணப்பிக்கலாம் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் அவற்றில் பலவும் உபசரிப்பு ஊழியர்களை வைத்துக்கொண்டு கூடுதலான பல சேவைகளையும் வழங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.
கேடிவி தொற்றுக் குழுமம் நம் போராட்டத்தில் ஒரு பின்னடைவாக இருப்பதால் அது ஏமாற்ற மளிக்கும் ஒன்றாக ஆகி இருக்கிறது. அத்தகைய நிலையங்ககளை நடத்துவோரும் அங்கு சென்று வந்திருப்போரும் பொறுப்பற்ற முறையில் நடந்தகொண்டதால் வந்த வினை என்றுதான் இதைச்சொல்ல முடியும்,
வேண்டுமென்றே விதிகளை, கட்டுப்பாடுகள் நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அவற்றை மீறி உபசரிப்பாளர்களை எல்லாம் வைத்து கொண்டு, அவர்களை வாடிக்கைளர்கள் உள்ளிட்ட பலரோடும் கலந்துறவாடவிட்டு, செயல்பட்டு இருக்கும்பட்சத்தில் கேடிவி நிலையங்களும் அவற்றை நடத்துவோரும் அதற்கான பொறுப்புகளை முழுமைக ஏற்கத்தான் வேண்டும். இதுவே அவற்றின் வாடிக்கைளர்களுக்கும் பொருந்தும்.
தங்களுக்கு மட்டுமின்றி, குடும்பத்தினர், சகாக்கள், நண்பர்களுக்கு மட்டுமின்றி, மொத்த சமூகத்திற்குமே அவர்கள் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கேடிவி கேளிக்கைக் கூடங்களுக்குச் சென்று வந்திருப்போரில் பலரும் தாங்களாகவே முன் வந்து உண்மையைத் தெரிவிக்க மறுப்பதால் பல பிரச்சினை களுடன் தடமறியும் நடவடிக்கையும் பாதிக்கப்படுகிறது.
அந்த நிலையங்களுக்குச் சென்றுவந்து இருப்போர் தாங்களாகவே பரிசோதனைக்கு முன்வந்து தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். பரிசோதனை ரகசியமாக இருக்கும் என்ற ஏற்பாடு இருந்தால் அது இவர்கள் முன்வர ஓரளவுக்கு ஊக்குவிக்கும் என்று நம்பலாம். கொரோனா காலத்தில் மக்கள் அன்றாட வாழ்வைத் தொடர வேண்டும். வேலை பார்த்தாக வேண்டும். இதற்கு அவர்கள் ஓர் இடத்தில் சேர வேண்டிய தேவை இருக்கலாம், இது அவசியமாகவும் இருக்கலாம்.
இருந்தாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற நிபந்தனைகளை மீறாமல் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும். அதே வேளையில், பொழுதுபோக்கு இடங்கள் என்று வரும்போது இன்னும் கடுமைன கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியமானதாகத் தெரிகிறது.
கேடிவி போன்ற மனமகிழ் கூடங்களில் உபசரிப்பாளர்கள் இருந்ததன் தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதால், எல்லைக் கட்டுபாடுகளைக் கடுமைக்குவது மட்டும் போதாது என்றும் வேலை, வருகை, மற்றவற்றின் பேரில் வெளிநாட்டினருக்குக் கொடுக் கப்படும் அனுமதியைக் கடுமைக்க வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது.
அனுமதி பெற்று இங்கு வந்து விதிகளை மீறி செயல்படுவோர் தங்கள் செயலுக்கான பிரதிபலனை அனுபவிக்க வேண்டும்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால், கொவிட்-19க்கு எதிரான இடைவிடா போர் இப்போதைக்கு முடிது, அதில் முழு வெற்றி காண முடிது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது அவசிய மானது. ஒருவர் இடம் கொடுத்தாலும் கிருமி பரவி பெரும் சமூகப் பிரச்சினைகிவிடும் என்பதை எடுத்துக்காட்டி கேடிவி தொற்றுக் குழுமம் நம்மை எச்சரிக்கிறது.