நிலப் பயனீட்டுத் திட்டங்கள்: மக்கள் யோசனை வரவேற்பு நான்கு கட்டங்களாக ஓராண்டு காலம் நடக்கும் கலந்துரையாடல்கள் தொடக்கம்

நிலப் பயனீட்டுத் திட்டங்கள்: மக்கள் யோசனை வரவேற்பு நான்கு கட்டங்களாக ஓராண்டு காலம் நடக்கும் கலந்துரையாடல்கள் தொடக்கம்

2 mins read
69fc5cbf-1f10-4de0-8664-43ed7c1b9732
-

சிங்­கப்­பூ­ரில் 50 ஆண்­டு­களில் முதன்­மு­த­லாக நீண்­ட­கால நிலப் பய­னீட்­டுத் திட்ட மறு­பரி­சீ­லனை, நிச்­ச­ய­மில்­லாத எதிர்­கா­லத்தை கைக்­கொள்­ளக்­கூ­டிய பல விருப்ப உரி­மை­க­ளை­யும் உள்­ள­டக்க இருக்­கிறது.

நகர மறு­சீ­மைப்பு ஆணை­யம், நீண்­ட­கால நிலப் பய­னீட்­டுத் திட்­டங்­கள் பற்றி சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் இருந்து கருத்­து­கள், யோச­னை­களைப் பெற விரும்­பு­கிறது. அந்­தத் திட்­டங்­கள் இப்­போது மறு­ப­ரி­சீலனை செய்­யப்­ப­டு­கின்­றன.

அதன் ஒரு பகு­தி­யாக ஓராண்டு முழு­வ­தும் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடக்­கும். அதன் மூலம் பொது­மக்­களி­டம் இருந்து கருத்­து­கள் திரட்­டப்­படும் என்று ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

சமூ­கம், மக்­கள்­தொகை, சுற்றுச்­சூ­ழல், தொழில்­நுட்ப மாற்­றங்­கள் கார­ண­மாக நிச்­ச­ய­மில்­லாத நிலை அதி­க­மாகி வரு­கிறது.

இந்­நி­லை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய நீண்­ட­கால திட்ட மறு­ப­ரி­சீ­லனை, மீள்­தி­றன், நீக்­குப்­போக்கு, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கும் நிலை ஆகி­ய­வற்­றில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் என்­றது ஆணை­யம்.

திட்­ட­மி­டு­வ­தில் இடம்­பெ­றக்­கூடிய நீக்­குப்­போக்கு கார­ண­மாக கொவிட்-19 போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் எதிர்­கால தலை­மு­றை­யி­னர் அதற்கு ஏற்ப மாறிக்­கொள்ள வழி ஏற்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நீண்­ட­கால திட்ட மறு­பரிசீலனைக்­கான பொதுக் கலந்­து­ரையாடல்­கள் இந்த மாதத்­திற்­கும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்­திற்கும் இடை­யில் நான்கு கட்­டங்­களாக நடக்­கும். ஒவ்­வொன்­றும் நான்கு மாதங்­கள் நீடிக்­கும்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும் இரண்­டாம் தேசிய வளர்ச்சி அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா­வும் நேற்று 20 இளை­யர்­க­ளு­டன் பிரத்­தி­யே­க­மாக அந்தக் கலந்­து­ரை­யா­டலை தொடங்கி வைத்­த­னர்.

அதைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, ஒரு நக­ர­மா­க­வும் அதே­வே­ளை­யில், ஒரு நாடா­க­வும் சிங்­கப்­பூர் இருக்­கிறது என்­பதைச் சுட்­டி­னார்.

"நம்­மு­டைய நகர எல்­லைக்­குள் உட்­பட்ட வரம்­பு­க­ளைக் கொண்டு நாம் ஒரு நாட்­டுக்­குத் தேவை­யான அனைத்­தை­யும் நிறை­வேற்ற மிக­வும் புத்­தாக்­கத் திற­னு­டன் செயல்­பட வேண்டி இருக்­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

ஆகை­யால், இன்று, நாளைக்கு மட்­டும் என்று இல்­லா­மல் நீண்­ட­கா­லப் போக்­கில் நாம் திட்­ட­மிட வேண்டி இருக்­கிறது என்­றார் அவர்.

இது ஒரு சவால்­மிக்க பணி என்று குறிப்­பிட்ட அவர், இருந்­தா­லும் ஏரா­ள­மான வாய்ப்­பு­களும் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூரை இன்­னும் சிறந்த இட­மாக உரு­வாக்­கு­வ­தற்கு உதவும் பல வழி­களை நாம் கற்­பனை செய்து பார்க்க முடி­யும் என்ற அமைச்சர், இதற்கு அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆத­ரவு தேவை என்­பதை வலி­யு­றுத்­தி­னார்.

இதன் கார­ண­மா­கவே இந்­தக் கலந்­து­ரை­யா­டல் தொடங்­கப்­ப­டு­வதாக அவர் குறிப்­பிட்­டார்.

நீண்­ட­கால திட்ட மறு­ப­ரி­சீ­ல­னை­யில் பங்­கெ­டுத்­துக்­கொள்­ளும்­படி ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ரரை­யும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி­ வரை பொது­மக்­கள் தங்­கள் கருத்­து­களை https://www.ura.gov.sg/Corporate/Planning/Long-Term-Plans/Long-Term-Plan-Review என்ற இணை­யம் வழி­யி­லான ஆய்­வில் தெரி­யப்­ப­டுத்­த­லாம்.

அடுத்­த­டுத்த கலந்­து­ரை­யா­டல்­களில் எப்­படி கலந்­து­கொள்­வது என்­பது பற்­றிய விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும்.