மனநலம், உயிர் மாய்ப்பு தடுப்பு, சுற்றுச்சூழல் நிலைப்பாடு ஆகிய நற்பணிகளுக்கான முயற்சிகளை முன்னெடுப்போர், தங்களுடைய திட்டங்களுக்கு உதவும் $250,000 மானியத்தை இப்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்படும் திட்டம் ஒவ்வொன்றுக்கும் $1,000 முதல் $3,000 வரை அந்த மானியம் கிடைக்கும். உலக இளம் தலைவர்களின் வருடாந்திர உச்சநிலை மாநாடு நேற்று நடந்தது. அதில் இந்த நிதி உதவி பற்றி அறிவிக்கப்பட்டது.
அந்த மானியத்தை 'இன்னோடிரக்' என்ற வெளிப்புற போதனை நிறுவனம் வழங்குகிறது.
சிராங்கூன் கார்டன் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நேரடியாகவும் இணையம் மூலமாகவும் நடந்த அந்த உச்சநிலை மாநாட்டில் 77 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள்.
இந்த மானியம் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் இதற்கு விண்ணப்பிக்கவும் www.characterleadership.sg/impact-to-the-community என்ற இணையத்தளத்தை நாடலாம்.
கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தன்னுடைய வாழ்க்கைத்தொழில் பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பிய துணை அமைச்சர் கான், தனது இளமைப் பருவத்தில் ராணுவத்தில் பாடியதை நேற்றைய நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்தார்.
"இளைய தலைவர்கள் என்ற முறையில், முக்கியமான அம்சங்கள் தொடர்பில் ஒன்றாகச் சேர்ந்து குழு முயற்சிகளைத் தொடங்கி, கலந்துரையாடல்களை உருவாக்கி, அவற்றின் மூலம் சமூகத்துக்கு உதவ உங்கள் ஆற்றலும் நாட்டமும் தேவைப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
பெரும் பெரும் சாதனைகள் எல்லாம் தனிப்பட்ட ஒருவரின் சிறு செயல்களில் இருந்தே தொடங்கு கிறது என்பதை அவர் சுட்டினார்.

