மெய் மறக்க வைத்த 'மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை'

மெய் மறக்க வைத்த 'மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை'

3 mins read
7c18aa0b-af2d-472d-af8d-8ab756df60c0
-

இந்து இளங்­கோ­வன்

விஜய் சேது­பதி, மடோனா நடிப்­பில் தமிழ் திரை­யு­ல­கில் வலம்­வந்த 'கவண்' திரைப்­ப­டத்தை நம்­மில் பலர் பார்த்­தி­ருப்­போம். ஆனால் 'கவண்', பிர­பல கவி­ஞ­ரும் பாட­லா­சி­ரி­ய­ரும் எழுத்­தா­ள­ரு­மான கபி­லன் வைர­முத்து இயற்­றிய 'மெய்­நி­கரி' என்­னும் நாவலை தழுவி உரு­வாக்­கப்­பட்­டது என்­பது படத்தை பார்த்து ரசித்த பல­ருக்கு தெரி­யாத ஒன்று.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­க தமி­ழி­லக்­கிய வகுப்­பில் பாடப்­பொ­ரு­ளாக சேர்க்­கப்­பட்­டுள்ள இந்­நா­வலை மையப்­

ப­டுத்தி 'மெய்­நி­கரி: ஒரு கவி­பார்வை' என்­னும் கவி­ய­ரங்கை வாசிப்பு விழா 2021-ன் ஓர் அங்­க­மாக ஜூலை 10-ஆம் தேதி மெய்­நி­கர் பாணி­யில் படைத்­தது இளம் எழுத்­தா­ளர் வட்­டம். இந்­நி­கழ்­வில் கபி­லன் கலந்­து­கொண்டு இளம் கவி­ஞர்­க­ளுக்கு உற்­சா­க­மூட்­டி­னார்.

பொது­வாக ஒரு கவி­ய­ரங்கு பொது­வாக சமூக தலைப்­பு­களை ஒட்­டியோ, குறிப்­பிட்ட நபரை பற்­றியோ அல்லது காப்­பி­யங்­களை அல­சியோ நடக்­கும்.

ஆனால் இந்த கவி­ய­ரங்­கில் மாறு­பட்ட வித­மாக பங்­கு­பெற்ற ஏழு இளம் எழுத்­தா­ளர்­கள் மெய்­நி­கரி நாவலை படித்து அது முன்­வைக்­கும் கருத்­து­க­ளை­யும் சிந்­த­னை­க­ளை­யும் விவா­தங்­க­ளை­யும் காட்­சி­க­ளை­யும் உள்­வாங்­கிக்­கொண்டு, தங்­க­ளது புரி­தலை கவி­தை­க­ளாக வெளிப்­ப­டுத்­தி­னர்.

சுமார் ஒன்­றரை மணி நேரம் மிக சுவா­ர­சி­யமான வகை­யில் படைக்­கப்­பட்­டது இந்தக் கவி­ய­ரங்கு. பங்குபெற்­ற­வர்­கள் படைத்த ஒவ்­வொரு கவி­தை­யும் ஒவ்­வொரு பாணி­யில் கேட்­ப­வர்­க­ளின் சிந்­த­னையைத் தூண்­டியது.

நாவல் கூறும் கருத்­து­க­ளை­யும் தங்­க­ளது கற்­ப­னை­க­ளை­யும் ஒன்­று­சேர்த்து கவிதை வடி­வில் படைத்து எழுத்­தா­ளரை வியப்­பில் ஆழ்த்­தி­னர் இளை­யர்­கள்.

"இந்த நிகழ்­வின் வழி சில சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர்­க­ளின் கவிதை ஆர்­வத்தை இணைப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யாக எனது நாவல் அமைந்­தி­ருப்­பது எனக்கு மகிழ்ச்சி தரு­கிறது."

"முத­லில் ஒரு நாவ­லி­லி­ருந்து திரைக்­

க­தை­யாக மாறிய மெய்­நி­கரி. இப்­போது கவி­தை­யாக மாறி­யி­ருக்­கிறது," என்­றார் ஒரு பார்­வை­யா­ள­ராக மாறி கவி­தை­களை ரசித்து மகிழ்ந்த திரு கபி­லன்.

தமி­ழில் தனி­யார் தொலைக்­காட்­சி­யின் பல நிகழ்ச்­சி­களின் உரு­வாக்­கத்­தில் மூன்று ஆண்­டு­க­ளாக பங்­குபெற்ற திரு கபி­லன், அங்கு பெற்ற அனு­ப­வங்­க­ளை­யும் அவரை பாதித்த சம்­ப­வங்­க­ளை­யும் கற்­பனை கலந்த கதை­யாக வடி­வ­மைத்­தி­ருக்­கி­றார்.

இந்த கவி­பார்வை, ஊட­கங்­கள், பொழுது­போக்கு அம்சங்கள் போன்­றவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் தாக்­கத்­தைப் பற்றி இளை­யர்­கள் கொண்­டுள்ள பார்­வையையும் வெளிக்­கொ­ணர்ந்­தது.

நிகழ்­வின் இறு­தி­யில் எழுத்­தா­ளர் கபி­லன் வைர­முத்து, பங்­கேற்­பா­ளர்­கள் படைத்த கவி­தை­களில் தம்மை அதி­கம் கவர்ந்­த­தாக 'ஊட­கத் தமிழ்' என்­னும் கவி­தையை தேர்வு செய்­தார்.

இக்­க­வி­தையை இயற்­றி­ய­வர், மென்­பொ­ருள் துறை­யில் பணி­யாற்­றி­வ­ரும் இரா­ஜேஷ் குமார் தர்­ம­லிங்­கம், 35. ஒவ்­வோர் ஆண்­டும் நடை­பெ­றும் வாசிப்பு விழா­வில் இவர் தவ­றாது பங்­கெ­டுத்து வரு­கி­றார்.

ஊட­கத் தமி­ழின் வர­லாறு, அதன் நன்­மை­கள், பாதிப்­பு­கள் போன்­ற­வற்றை தமது கவி­தை­யில் அடக்­கி­யி­ருந்த

இரா­ஜேஷ், தமது கவி­தை­யின் முடிவை 'மெய்­நி­கரி' நாவ­லின் முடிவை போன்றே அமைத்­தி­ருந்­தது பார்­வை­யா­ளர்­க­ளை­யும் எழுத்­தா­ள­ரை­யும் ஒரு­சே­ரக் கவர்ந்­தது.

நகைச்­சு­வை­யு­டன் மிக இயல்­பா­க­, கல­க­லப்­பாக நிகழ்ச்­சியை வழிநடத்தி சென்­ற­னர் இளம் நெறி­யா­ளர்­கள் மிரு­துளா குமார் மற்­றும் அஜ்­மினா பானு.

வாசிப்பு விழா 2021-ன் அடுத்த சில தமிழ் நிகழ்ச்­சி­க­ளின் விவ­ரங்­கள் அறிய: www.nationalreadingmovement.sg/readfest/programmes