‘ரிவர் வேலி ஹை’ பள்ளியில் 13 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டதன் தொடர்பில் 16 வயது மாணவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 19ஆம் தேதி காலை 11.40 மணியளவில், 6 பூன் லே அவென்யூவில் உள்ள அந்தப் பள்ளியிடமிருந்து போலிசாருக்கு உதவிக்கான அழைப்பு வந்தது. பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள், தாக்கப்பட்ட 13 வயது மாணவர் கழிவறையில் பலத்த காயங்களுடன் அசைவின்றிக் கிடந்ததைக் கண்டனர்.
சம்பவ இடத்திலேயே அந்த மாணவர் மாண்டதாக போலீசர் கண்டறிந்தனர். உயிரிழந்த மாணவருக்கும் அவரைத் தாக்கிய மாணவருக்கும் இடையே சம்பவத்திற்கு முன்னர் எந்த முன்பழக்கமும் இல்லை என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் கோடரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இம்மாதம் 20ஆம் தேதியன்று தாக்குதல் நடத்திய அந்த மாணவன் மீது, இம்மாதம் 20 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.அத்துடன் அவருக்கு மனநல பரிசோதனையும் செய்யப்படும்.
முறையான விசாரணையின்மூலம், முழு விவரங்கள் வெளியாகும் வரையில்,வதந்திகளைப் பரப்ப வேண்டாமென்றும், மரணமுற்ற மாணவனின் குடும்பத்தினரின் உணர்வுகளை மதித்து நடக்கும்படியும் போலீசார் இந்நேரத்தில் பொதுமக்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றனர்.