கொவிட்-19 பரவல் இங்கு தொடங்கியதிலிருந்து இங்குள்ள முஸ்லிம் சமூகம் தன்னையும் மற்ற சிங்கப்பூர் சமூகத்தில் உள்ள மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முக்கிய தியாகங் களையும் நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றங்களையும் செய்திருப்பதாக சிங்கப்இபூர் ஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) கூறியுள்ளது.
முஸ்லிம்கள் தங்கள் அன்புக்குரியவர்கள், குறிப்பாக முதியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அத்தகைய சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து நடந்துகொள்வது முக்கியம் என்றது முயிஸ். இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முயிஸ் நேற்று வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் அதனைத் தெரிவித்தது.
அண்மை நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ள பரவலால் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முயிஸ், கிருமித்தொற்று ஆபத்து அதிகமுள்ளவர்கள், குறிப்பாக முதியவர்களை அடுத்த சில நாட்களுக்கு முடிந்தவரை வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹுஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களைப் பெருமளவு குறைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் செயல்பட்டதை முயிஸ் குறிப்பிட்டது. இது, சமய நடவடிக்கை களால் ஏற்படக்கூடிய தொற்றின் அபாயத்தைக் குறைக்க உதவியுள்ளதாக முயிஸ் கூறியது.
இதற்கிடையே, கொவிட்-19 பலரது, குறிப்பாக சிங்கப்பூர் முஸ்லிம்கள் பலரது வாழ்க்கையைப் பாதித்துள்ளது. அவர்கள் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜுப் பயணத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று கவலை கொண்டுள்ளனர். அதுவும் இரண்டு ஆண்டுகளாக," என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவத்தார்.
வெள்ளிக்கிழமை, பெருநாள் தொழுகையில் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கிய முஸ்லிம்கள், கடினமாக இருப்பினும் அவர்கள் அமைதியாக அக்கட்டுப்பாடுகளின் நடந்தது மெச்சத்தக்கது என்று அதிபர் ஹலிமா நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.

