மின்வர்த்தக துறையில் திறன் வளர்ச்சிக்கு புதிய நிலையம்

மின்வர்த்தக துறையில் திறன் வளர்ச்சிக்கு புதிய நிலையம்

1 mins read
f4ac76e8-b3af-4cf5-91b4-693d7ca26d89
புதிய மின்வர்த்தக நிலையத்தில் இயந்திர மனிதன் மட்டுமே செயல்பட்டு நடத்தும் காப்பிக் கடை திறக்கப் பட்டுள்ளது. இயந்திர மனிதனே இதில் காப்பி தயாரிக்கும் 'பாரிஸ்டா'வாகப் பணிபுரிகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின்­வர்த்­த­கத் துறை­யில் நுழைந்து பணி­யாற்­று­வ­தற்­குத் தேவை­யான திறன்­களை தனது தற்­போ­தைய, மற்றும் முன்­னாள் மாண­வர்­களுக்கு வழங்­கும் நோக்­கில் தெமா­செக் பல­து­றைத்­ தொ­ழில்­கல்­லூரி புதிய அறி­வார்ந்த மின்­வர்த்­தக நிலை­யத்­தைத் தொடங்­கி­யுள்­ளது.

கல்வி, மனி­த­வ­ளம் ஆகி­ய­வற்­றுக்­கான துணையமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் நிலை­யத்தை நேற்று திறந்து வைத்­தார்.

பல­து­றைத் தொழில்­கல்­லூ­ரி­யும் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சேர்ந்து வழங்­கிய $1 மில்­லி­யன் நிதி­யில் நிலை­யம் அமைக்­கப்­பட்­டது.

நிறு­வ­னங்­கள், வளர்ந்­து­வ­ரும் தொழில்­மு­னை­வர்­கள் ஆகி­யோ­ரின் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் முயற்சி ­க­ளுக்கு உதவ, அவர்­க­ளு­டன் நிலை­யம் கூட்­டா­கச் செயல்­படும்.

திட்டத்தின்­கீழ் இயந்­தி­ரங்­கள் மட்­டும் நடத்­தும் இரண்டு கடை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பொது­மக்­க­ளுக்கு அவை படிப்படியாக திறந்­து­வி­டப்­படும் என்றது தெமா­செக் பல­து­றைத்­ தொ­ழில்­கல்­லூரி.