இந்தோனீசியாவுக்கு உயிர்வாயு அனுப்பும் சிங்கப்பூர்

இந்தோனீசியாவுக்கு உயிர்வாயு அனுப்பும் சிங்கப்பூர்

1 mins read
2bf2834d-6991-4a31-a9eb-1196de6b6efe
அனுப்பி வைக்கப்பட்ட உயிர்வாயுத் திரவத் தோம்பு. படம்: ஸ்மார்ட்-கேஸ் பிரைவட் லிமிடட் -

அண்டை நாடான இந்­தோ­னீ­சி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது. கிரு­மித்­தொற்றை எதிர்த்­துப் போரா­டும் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு உத­வும் வகை­யில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அந்­நாட்­டுக்கு அடிக்­கடி உயிர்­வா­யுத் தோம்­பு­களை விநி­யோ­கம் செய்ய இருக்­கிறது. இந்­தோ­னீ­சியா கேட்­டுக்­கொண்­ட­தற்கு இணங்க ஆக்­சி­ஜன் ஷட்­டல் எனும் திட்­டத்­தின்­கீழ் உயிர்­வா­யுத் தோம்­பு­கள் அனுப்பி வைக்­கப்­படும்.

இத்­திட்­டத்­தின்­கீழ் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு 500 டன்­னுக்­கும் அதி­க­மான உயிர்­வாயு நேற்று முதல் அடுத்த மாதம் வரை அனுப்பி வைக்­கப்­படும்.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர் அனுப்பி வைத்த 80 டன் உயிர்­வா­யுத் திர­வத்­தைக் கொண்ட நான்கு ஐஎஸ்ஓ தோம்­பு­கள் இந்­தோ­னீ­சி­யத் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் உள்ள தஞ்­சோங் பிரி­யோக் துறை­மு­கத்தை நேற்று அடைந்­தன.

ஆக்­சி­ஜன் திர­வங்­க­ளைக் கொண்ட தோம்­பு­கள் மட்­டு­மல்­லாது, இம்­மா­தம் 9ஆம், 11ஆம் தேதி­களில் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு செயற்கை சுவா­சக் கருவி உட்­பட பல்­வேறு மருத்­துவ சாத­னங்­களை சிங்­கப்­பூர் அனுப்பி வைத்­தது.