மின்சாரத்தில் இயங்கும் குப்பைச் சேகரிப்பு வாகனங்களுக்கான மின்னூட்டி மையம்: துவாசில் செம்ப்கார்ப் நிறுவனம் திறப்பு

மின்சாரத்தில் இயங்கும் குப்பைச் சேகரிப்பு வாகனங்களுக்கான மின்னூட்டி மையம்: துவாசில் செம்ப்கார்ப் நிறுவனம் திறப்பு

1 mins read
7ffc884a-5670-4a75-992b-646a80b37a3b
மின்சாரத்தில் இயங்கும் குப்பைச் சேகரிப்பு வாகனத்திற்கு மின்னூட்டம் செய்யும் முயற்சியில் இறங்கிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குப்­பைச் சேக­ரிப்பு வண்­டி­க­ளுக்­கான மின்­சார வாகன மின்­னூட்ட மையம் துவா­சில் தொடங்­கப்­பட்­டுள்­ளது. தொழி­லக வாக­னங்­க­ளின் பயன்­பாட்­டிற்கு அடுத்த ஆண்டு அம்­மை­யம் திறந்­து­வி­டப்­படும்.

கிள­மென்டி-புக்­கிட் மேரா, நகர்ப்­ப­குதி-பொங்­கோல் வட்­டா­ரங்­களில் குப்­பை­க­ளை­யும் மறு­சு­ழற்­சிக் கழி­வு­க­ளை­யும் சேக­ரிப்­ப­தற்­காக இம்­மா­தத்­தில் பல மின்­சார வாக­னங்­களை செம்ப்­கார்ப் நிறு­வ­னம் அறி­மு­கம் செய்­தது, அதைத் தொடர்ந்து, அந்­நி­று­வ­னம் புதிய மின்­சார வாகன மின்­னூட்ட மையத்­தைத் திறந்­துள்­ளது.

செம்ப்­வேஸ்ட் நிறு­வ­னத்­தால் இயக்­கப்­படும் குப்­பைச் சேக­ரிப்பு வாக­னங்­க­ளுக்­கான மைய மின்­னூட்டி நிலை­ய­மாக துவாஸ் மையம் செயல்­படும்.

அம்­மை­யத்­தின் ஒரு பகுதி சூரிய ஆற்­ற­லால் இயங்­கும். அங்கு நான்கு மணி நேர விரைவு மின்­னூட்­டச் சுழற்சி முறை­யில், ஒரே நேரத்­தில் 18 தொழி­லக மின்­சார வாக­னங்­க­ளுக்கு மின்­னூட்­டம் செய்­ய­லாம்.

துவா­சில் உள்ள செம்ப்­கார்ப் பணி­ம­னை­யில் இடம்­பெற்ற மின்­னூட்டி மையத் திறப்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், பசுமை வாக­னங்­க­ளுக்­கான ஊக்­கு­விப்பு முயற்­சி­யில் செம்ப்­கார்ப் நிறு­வ­னத்­தின் நட­வ­டிக்கை குறிப்­பி­டத்­தக்­கது என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் ஓடும் வாக­னங்­களில் கன­ரக வாக­னங்­கள் பத்­தில் ஒரு பங்­கிற்­கும் குறை­வா­கவே இருந்­த­போ­தும், கரிம வெளி­யிட்­டீல் அவை கிட்­டத்­தட்ட பாதி­ய­ள­விற்­குக் கார­ண­மாக உள்­ளன என்று அவர் குறிப்­பிட்­டார்.

"மின்­ம­ய­மாக்­கு­வ­தன்­மூ­லம், கார் போன்ற இலகு ரக வாக­னங்­க­ளைக் காட்­டி­லும் கன­ரக வாக­னங்­களில் கரிம வெளி­யீடு வெகு­வா­கக் குறை­கிறது," என்றார் திரு ஈஸ்­வ­ரன்.

இத்­த­கைய வணி­க­ரீ­தி­யாக இயங்­கும் வாக­னங்­களை மின்­ம­ய­மாக்­கு­வது, மின்­சார வாக­னங்­களுக்­கான மின்­னூட்­டக் கட்­ட­மைப்பை அதி­க­ரிப்­பதை ஊக்­கு­விக்க உத­வும் என்­றும் அவர் கூறி­னார்.