கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களிடையே நான்கு பேருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
அந்த நால்வருக்கும் குறித்த நேரத்தில் முறையான மருத்துவ கவனிப்பு இடம்பெற்றதாகவும் அவர்கள் இப்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
தேசிய அளவில் இடம்பெறும் தடுப்பூசி தொடர்பான பாதக விளைவுகளைப் பற்றி தெரிவிக்க வேண்டிய தேவை இருப்பதையொட்டி அச்சம்பவங்கள் பற்றிய ஏற்புடைய தகவல்கள், சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, ராணுவ வீரர்களுக்கு 100,000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன. அவர்களில் 92 விழுக்காட்டினர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜூன் மாதம் முதல் தேசிய சேவைக்குப் பதிவோர் ஆட்சேர்ப்புக்கு முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

