சண்முகம்: கோடரி இணையம் மூலம் வாங்கப்பட்டது

சண்முகம்: கோடரி இணையம் மூலம் வாங்கப்பட்டது

2 mins read
e10bf2ba-8190-438f-b413-d2d6d29908c9
-

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மாணவனின் கொலை தொடர்­பாக போலி­சார் தீவி­ர­மாக விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். உயர்நிலை ஒன்றில் பயின்ற சிறு­வ­னைக் கொல்லப் பயன்­ப­டுத்­தப்­பட்ட

கோட­ரியை அப்பள்ளியில் பயின்ற 16 வயது உயர்நிலை நான்கு மாண­வன் இணை­யம் மூலம் வாங்­கி­ய­தாக ஆரம்­பக்கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

ஆனால் விசா­ரணை நிறை­

வ­டைந்த பிற­கு­தான் வழக்கு தொடர்­பான முழு விவ­ரங்­கள் பற்றி தெரி­ய­வ­ரும் என்­றார் அவர்.

பொது­வாக சிங்­கப்­பூர் பள்­ளி­களில் மாண­வர்­கள் பாது­காப்­பு­டன் இருப்­பது உறுதி என்று அனை­வ­ரும் கரு­து­வ­தால் இந்­தக் கொலைச் சம்­ப­வம் அனை­வ­ருக்­கும் அதிர்ச்சி யை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். எந்தப் பெற்­றோ­ருக்­கும் இப்­படி ஒரு பாதிப்பு ஏற்­ப­டக்­

கூ­டாது என்­றார் திரு சண்­மு­கம்.

சொல்­லொணா துய­ரத்­தில் ஆழந்­துள்ள கொலை­யுண்ட சிறு

­வ­னின் பெற்­றோ­ரின் துன்­பத்தை அனை­வ­ரும் பகிர்ந்­து­கொள்­வ­தாக அவர் கூறி­னார்.

"தாக்­கு­தல் நடத்­தி­ய­வ­ரும் ஒரு சிறு­வன். அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

"அந்­தச் சிறு­வ­னுக்கு மன­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­துள்­ள­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது," என்று அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார். கொலை செய்­த­தாக நம்­பப்­படும் சிறு­வன் நேற்று காணொளி வாயி­லாக நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டான்.

நேற்று முன்­தி­னம் காலை 11.16 மணி­யி­லி­ருந்து 11.44 மணிக்கு இடைப்­பட்ட நேரத்­தில் பள்­ளி­யின் நான்­கா­வது மாடி­யில் உள்ள கழி­

வ­றை­யில் 13 வயது சிறு­வ­னைக் கொன்­ற­தாக அவன் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக குற்­றம் சாட்­டப்­பட்ட மாண­வன் சாங்கி மருத்­துவ நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளான். குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் மாண­வன் முன்பு தற்­கொலை முயற்சி­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் அதன் கார­ண­மாக 2019ஆம் ஆண்­டில் மன­ந­லக் கழ­கத்­தில் அவ­ரது மன­ந­லம் பரிசோதிக்கப்பட்ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.