பிரதமர் லீ: சோகம், அதிர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

பிரதமர் லீ: சோகம், அதிர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

2 mins read
21c74f52-8c7e-47a6-b0c0-45e78ce3505f
-

ரிவர் வேலி உயர்­நி­லைப்­பள்­ளி­யில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த கொலைச் சம்­ப­வத்­தால் தாம் அதிர்ச்­சி­யில் ஆழ்ந்­தி­ருப்­ப­தா­க­வும் அதை வர்­ணிக்க வார்த்­தை­களே இல்லை என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்டா்.

"மீளாத் துய­ரில் ஆழ்ந்­துள்ள மாண்ட சிறு­வ­னின் குடும்­பத்­தைப் பற்றி நினைக்­கும்­போது மனம் பட­ப­டக்­கிறது. நேற்று அந்­தச் சிறு­வனை அவ­னது பெற்­றோர் பள்­ளிக்கு அனுப்­பி­வைத்­த­னர். திடீ­ரென்று, எவ்­வித எச்­ச­ரிக்­கை­யும் இன்றி அவன் உயி­ரி­ழந்­து­விட்­டான். சிறு­வ­னின் குடும்­பத்­துக்கு நம்­மால் ஆறு­தல் கூற முடி­யாது.

"இருப்­பி­னும், அவர்­க­ளுக்கு எனது அனு­தா­பத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அவர்­க­ளுக்­காக நான் பிரார்த்­தனை செய்­கி­றேன்.

"ரிவர் வேலி உயர்­நி­லைப்­பள்­ளி­யைச் சேர்ந்த ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் அதிர்ச்­சி­யில் ஆழ்ந்­துள்­ள­னர். இந்த இருண்ட காலத்­தில் நாங்­கள் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­போம். கொலை தொடர்­பாக போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். கொலைக்­கான நோக்­கத்­தைக் கண்­டு­பி­டிக்க நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரப்­ப­டு­கிறது.

"இந்­தத் துய­ரச் சம்­ப­வத்­தைத் தடுத்­தி­ருக்­க­லாமா என்­பது குறித்து ஆரா­யப்­ப­டு­கிறது. விசா­ரணை முடிய காத்­தி­ருப்­போம். வதந்­தி­க­ளைப் பரப்பி ஏற்­கெ­னவே சோகத்­தில் மூழ்­கி­யி­ருக்­கும் குடும்­பத்­தி­ன­ரின் நிலையை மோச­மாக்க வேண்­டாம்.

"பள்­ளி­யில் இருக்­கும் மாண­வர்­க­ளுக்­கான பாது­காப்­புக்­கும் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் ஆகி­யோ­ரின் நல­னுக்­கும் தொடர்ந்து முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­கிறது.

"கல்­வி­யில் சிறப்­பா­கச் செயல்­

ப­டு­வ­தில் மட்­டுமே நமது கல்வி முறை கவ­னம் செலுத்­த­வில்லை. மகிழ்ச்­சி­யான, அனைத்து சூழ­லுக்கும் ஏற்­ற­வாறு நடந்­து­கொள்­ளும் திறன் கொண்­ட­வர்­க­ளாக வளர சிறு­வர்­க­ளுக்கு நமது கல்வி முறை உத­வு­கிறது.

"தங்­கள் நண்­பர் மன­வு­ளைச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் உட­ன­டி­யாக தலை­மை­யா­சி­ரி­யர் அல்­லது பள்ளி ஆலோ­ச­க­ரி­டம் தெரி­விக்­க­வும். சம்­பந்­த­ப்பட்ட மாண­வ­ரின் குடும்­பத்­தா­ரு­டன் அவர்­கள் ஒன்­றி­ணைந்து தேவை­யான உத­வி­க­ளைச் செய்­வர்," என்­றார் திரு லீ.