பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஹஜ்ஜுப் பெருநாள் வழிபாடு

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஹஜ்ஜுப் பெருநாள் வழிபாடு

2 mins read
7bccfd01-f11d-4756-a9e8-70b9d125d2e3
முன்பதிவு ஆதாரத்தைக் காட்டிய பிறகே பள்ளிவாசலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹஜ்­ஜுப் பெரு­நாளை முன்­னிட்டு சிங்­கப்­பூ­ரில் உள்ள பள்­ளி­வா­சல்­களில் நேற்று 18,000க்கும் மேற்­பட்­டோர் இறை வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­னர். கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முந்­திய கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஹஜ்­ஜுப் பெரு­நாள் அமை­தி­யான முறை­யில் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

முன்பு ஹஜ்­ஜுப் பெரு­நாளை முன்­னிட்டு சிங்­கப்­பூ­ரில் உள்ள 66 பள்­ளி­வா­சல்­களில் 66,000க்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­கள் கூடி­னர். அது ஒவ்­வொரு பள்­ளி­வா­ச­லி­லும் சரா­ச­ரி­யாக 1,000 பேர் கூடி­னர்.

நேற்று பள்­ளி­வா­சல்­களில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு முஸ்­லிம்­கள் இறை வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­னர்.

இரு­முறை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களும் அல்­லது கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­வர்­களும் இறை வழி­பாட்­டில் ஈடு­ப­டுவ­தற்­காக 19 பள்­ளி­வா­சல்­களில் 50 இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டன. 47 பள்­ளி­வா­சல்­களில் ஒரே இடத்­தில் அதி­க­பட்­சம் 50 பேர் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். ஹஜ்­ஜுப் பெரு­நா­ளன்று பள்­ளி­வா­ச­லில் இறை வழி­பாட்­டில் ஈடு­பட இணை­யம் வழி முன்­ப­திவு செய்­தி­ருக்க வேண்­டும். முன்­ப­தி­வுச் சேவை கடந்த வெள்­ளிக்­

கி­ழமை தொடங்­கி­யது.

முன்­ப­தி­வுச் சேவை தொடங்­கிய சில நிமி­டங்­க­ளி­லேயே 750 இடங்­களும் நிரப்­பப்­பட்­ட­தாக பாசிர் ரிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள அல்-இஸ்­திக்­ஃபர் பள்­ளி­வா­ச­லின் தலை­வர் அஸ்­மான் முகம்­மது அரி­ஃபின் கூறி­னார்.

இப்­பள்­ளி­வா­ச­லில் ஹஜ்­ஜுப் பெரு­நாள் சிறப்பு வழி­பாடு மூன்று வெவ்­வேறு நேரங்­களில் நடத்­தப்­பட்­டன. ஒவ்­வொரு நேரத்­தி­லும் 250 பேர் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். வழி­பாட்­டில் ஈடு­பட்­டோர் ஐந்து பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­ட­னர். இரண்டு பிரி­வு­கள் பெண்­க­ளுக்­காக ஒதுப்­பட்­டன. ஐந்து பிரி­வு­க­ளுக்­கும் தனித்­தனி நுழை­வா­யில்­களும், நடை­பா­தை­களும், கழி­வறை வச­தி­களும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஒவ்­வொரு வழி­பாட்டு நேர­மும் முடிந்த பிறகு அறை­கள் சுத்­தம் செய்­யப்­பட்­டன. வழி­பாடு தொடங்­கும் நேரத்­துக்கு 10லிருந்து 15 நிமி­டங்­கள் இருந்­த­போது அதில் ஈடு­பட பதிவு செய்­த­வர்­கள் பள்­ளி­வா­சல்­களை அடைந்­த­னர். முன்­ப­திவு செய்­த­தற்­கான ஆதா­ரத்­தைக் காட்­டிய பிறகு அவர்­கள் உள்ளே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். வழி­பாட்­டுக்­குப் பயன்­ப­டுத்­தும் பாயை அவ­ர­வர் கொண்­டு­வர வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.