அறிவார்ந்த மின்வர்த்தக நிலையத்தை தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி திறந்துள்ளது.
தனது மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் மின்வர்த்தகத் திறனை ஏற்படுத்தித் தரும் இலக்குடன் புதிய நிலையத்தை அது அறிமுகப்
படுத்தியுள்ளது.
மின்னிலக்க முயற்சிகளை அதிகரிக்க நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவர்களுடன் புதிய நிலையம் இணைந்து செயல்படும்.
நிலையத்தின் திறப்பு விழாவில் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கலந்துகொண்டார்.

