சிங்கப்பூர்-ஹாங்காங் இருவழிப் பயணம் மறுஆய்வு

சிங்கப்பூர்-ஹாங்காங் இருவழிப் பயணம் மறுஆய்வு

1 mins read
6469bb28-ba49-4171-89c3-4625e6391a49
-

பெரி­தும் எதிர்­பார்க்­கப்­படும் ஹாங்­காங்-சிங்­கப்­பூர் இடை­யி­லான சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு தற்­போது தொடங்­கு­வ­தற்­கான சாத்­தி­யம் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக உல­கெங்­கும் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில். சிங்­கப்­பூர்- ஹாங்­காங் இடையே பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த தேவை­யில்­லாத சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கு­வது குறித்து இரு­நா­டு­களும் அடுத்த மாதம் மறு­ஆய்வு செய்ய இருக்­கின்­றன.

கொவிட்-19 சூழல் மேம்­பட்­டால்­தால் சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடை­யி­லான சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு குறித்து கலந்­து­ரை­யா­டல்­கள் தொட­ரும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னும் ஹாங்­காங்­கின் வர்த்­தக, பொரு­ளி­யல் மேம்­பாட்டு அமைச்­சர் எட்­வர்ட் யாவும் அறி­வித்­துள்­ள­னர்.

"சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு குறித்து இரு­நா­டு­களும் மிக அணுக்­க­மா­கச் செயல்­படும். அடுத்த மாதம் நடை­பெற இருக்­கும் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு முன்பு இரு­நா­டு­க­ளி­லும் நில­வும் பொது சுகா­தார நிலை கண்­கா­ணிக்­கப்­படும்," என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் நாளை முதல் அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் மேலும் 182 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 135 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கம், சந்­தை­கள், உணவு நிலை­யங்­கள் ஆகிய குழு­மங்­க­ளு­டன் தொடர்புடை­ய­வர்­கள்.