மக்கள் செயல் கட்சி (மசெக) சமூக அறநிறுவனம் ஆசியாவிலேயே ஆகச் சிறந்த வேலையிடமாக 'கிரேட் பிளேஸ் டு ஒர்க்' அமைப்பால் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது.
500 அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட பெரிய வேலையிடங்களுக்கான பிரிவில் மசெக சமூக அறநிறு
வனம் முதல் இடம்பிடித்துள்ளது.
மசெக சமூக அறநிறுவனம் இந்தப் பிரிவின்கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரே ஒரு சிங்கப்பூர் அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
மசெக சமூக அறநிறுவனத்தை மக்கள் செயல் கட்சி 1986ஆம் ஆண்டில் நிறுவியது.
சமூகத்துக்கான சமூக, கல்வி, நல்வாழ்வுத் திட்டங்களை அது நடத்துகிறது.
கொவிட்-19 சூழலின்போது சிறந்த வேலையிடத் திட்டங்
களையும் ஊழியர் ஆதரவு நட
வடிக்கைகளையும் மசெக சமூக அறநிறுவனம் நடைமுறைப்
படுத்தியதாக 'கிரேட் பிளேஸ் டு ஒர்க்' அமைப்பின் ஆசியான் மற்றும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்துப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி எவலின் குவேக் பாராட்டினார்.
"நெருக்கடிநிலையின்போது ஊழியர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கிய அதே வேளையில், 8,000 ஊழியர்களையும் 360 பாலர்க் கல்வி நிலையங்களையும் ஏழு மூத்தோர் பராமரிப்பு நிலையங்களையும் வழிநடத்துவது எளிதான காரியமல்ல," என்று திருவாட்டி குவேக் தெரிவித்தார்.
உதாரணத்துக்கு, 600 அல்ட்ராவைலட் சுத்திகரிப்பான்களை மசெக சமூக அறநிறுவனம் வாங்கியது.
அதுமட்டுமல்லாது, தனது பாலர்க் கல்வி நிலையங்கள், மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், தலைமையகம் ஆகிய இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய நிபுணத்துவ துப்புரவுப் பணி ஒப்பந்த
தாரர்களின் சேவையை அது பயன்படுத்தியது.
ஊழியர்களை உற்சாகப்படுத்த வாரந்தோறும் அவர்களுக்கு குறிப்புகளையும் சுயமாக தயாரிக்கப்பட்ட காணொளிகளையும் பாடல்
களையும் மூத்த மேலாளர்கள் அனுப்பி வைத்தனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டின் விளைவாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வர முடியாமல் தவித்த ஊழியர்களுக்காக மசெக சமூக நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான மருத்துவமனை, அறுவை சிகிச்சை காப்புறுதித் திட்டத்தை மாற்றி அமைத்தது.
இதன் விளைவாக மற்ற நாடு
களிலும் ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டால் அதற்கான கட்டணத்தைச் செலுத்த காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
இல்லத் தனிமை உத்தரவு அல்லது தனிமைப்படுத்துதல் உத்தரவை நிறைவேற்றும் தனது ஊழியர்களுக்கு அன்றாட
உணவுக்கான படித்தொகையை வழங்கியதாக அறநிறுவனம் கூறியது. மசெக சமூக அறநிறுவனத்தைத் தவிர்த்து, சிங்கப்பூரில் இயங்கும் வேறு சில அமைப்பு
களின் வேலையிட அணுகுமுறைகளும் அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
பன்னாட்டுப் பட்டியலில் டிஎச்எல் நிறுவனம் முதல் இடத்தையும் சிஸ்கோ நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

