சமூக அளவில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதால் பாதிக்கப்படும்
நிறுவனங்களுக்கு ஆதரவாக வர்த்தகச் சங்கங்கள் கோரிக்கை கள் விடுத்துள்ளன. கூடுதல் வாடகைக்கழிவு, சம்பள ஆதரவு, கடன் செலுத்த கூடுதல் அவகாசம் போன்றவற்றுக்கான தேவையை அவை சுட்டிக்காட்டுகின்றன.
முன்னணி தொழில் வர்த்தகச் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த மூன்று அம்ச உதவி கோரிக்கை காணப்பட்டது.
சில்லறை வர்த்தகம், உணவு பானம் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய இதுபோன்ற உதவிகள் தேவை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம் காணும்போது வர்த்தகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப வாடகைக் கழிவுகளை கட்டட உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என அது கோரிக்கை எழுப்பி உள்ளது.
அத்துடன், பல்வேறு வேலைகள் சிங்கப்பூரர்களுக்குச் சாத்தியமாகக்கூடிய வகையில் வர்த்தகங்களுக்கு உதவ அரசாங்கம் சம்பள ஆதரவை வழங்குவது தொடர்பான கோரிக்கையையும் அது விடுத்துள்ளது.
மூன்றாவதாக, வங்கிகள் வழங்கி உள்ள கடன்களின் அசலைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு 2022 ஜூன் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
இரண்டாம் கட்ட உயர் விழிப்பு நிலைக் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 18 வரை நடப்பில் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் கூட்டமைப்பின் அறிக்கை வெளிவந்து உள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளின்படி உணவு பானக் கடைகளில் உட்கார்ந்து சாப்பிடுவது இன்று முதல் ஆகஸ்ட் 18 வரை தடை செய்யப்
படுகிறது.
சிறிய, நடுத்தர நிறுவனச் சங்கம், சிங்கப்பூர் உணவகச் சங்கம், சிங்கப்பூர் சில்லறை வர்த்தகர்கள் சங்கம், சிங்கப்பூர், நியாயத்தன்மைக்கான சிங்கப்பூர் வாடகை
தாரர்கள் ஐக்கிய சங்கம் போன்றவை இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ளன.
வாடகைதாரர்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவரான டெரன்ஸ் யாவ் நேற்று மெய்நிகர் வாயிலாகச் செய்தியாளர்களிடம் பேசினார்.
கட்டட உரிமையாளர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில குறிப்பிட்ட உதவியை மட்டும் செய்வதாக அவர் தெரிவித்தார். அதே நேரம், கடந்த முறை உதவி வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்கியபோது அவர்களிடமிருந்து கணிசமான உதவி கிட்டியதாகவும் அவர் சொன்னார்.
"வாடகை இடத்தில் தொழில் நடத்தும் முன்னணி வர்த்தகங்களில் பெரும்பான்மையினர் அவர்களின் கட்டட உரிமையாளர்களிடம் இருந்து இன்னும் போதுமான வாடகைக் கழிவு ஆதரவைப் பெறவில்லை. பெரியதொரு வாடகை உதவி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கிறது. அது அடுத்த மாதம் கிடைக்க உள்ளது," என்றார் திரு டெரன்ஸ்.
பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு கூடுதல் வாடகைக்கழிவு, சம்பள ஆதரவு, கடன் செலுத்த அவகாசம்