சிங்கப்பூரின் S$41 பில்லியன் எரிபொருள் விற்பனைக்குச் சவால்
ஆசியாவில் கடற்துறை எரிபொருள் விற்பனையில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் சிங்கப்பூருக்கு போட்டி அதிகரித்துள்ளது.
சீனா, அந்தத் தனிப்பட்ட சந்தை யில் ஒரு பகுதியைக் கைப்பற்ற கடும் முயற்சிகளை எடுத்து வரு கிறது.
அண்மைய காலமாக சீனா தனது துறைமுகங்களை விரிவு படுத்தி வசதிகளை செம்மையாக்கி, அவ்வழியாகச் செல்லும் கப்பல்களை ஈர்த்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சீனாவின் எரிபொருள் விற்பனை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
உலகின் முக்கிய பொருளியல் நாடுகளான தென்கொரியா, ஜப்பான் போன்றவற்றின் துறைமுகங் களுக்குச் செல்லும் கப்பல்களை ஈர்ப்பதில் அது முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இருந்தாலும் ஆசியாவில் கப்பல் எரிபொருள் விற்பனையில் சிங்கப்பூர் இன்னமும் முன்னணி வகித்து வருகிறது. சிங்கப்பூரின் எரிபொருள் விநியோகத்தின் மொத்த மதிப்பு சுமார் 30 பில்லியன்(41 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) யுஎஸ் டாலராகும்.
இதனை நன்கு அறிந்துள்ள சீனா, எரிபொருள் விநியோக மையமாக ஷோவ்ஷான் தீவை மேம்படுத்தி வருகிறது.
ஷாங்காயின் கிழக்கு கடற் கரையோரமாக அமைந்துள்ள இந்தத் தீவுக்கு அருகே நாட்டின் புதிய, பெரிய அளவிலான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
சீன அரசாங்கம், வரிச்சலுகைகளை அறிவித்துள்ளதால் அந்நாட்டின் எரிெபாருள் விலையும் சிங்கப்பூருக்குப் போட்டியாக உள்ளது.
சிங்கப்பூர் தனது நிலையை இன்று வரை கட்டிக்காத்து வந்துள்ளதாகக் கூறிய டிருவ்ரி கடற்துறை ஆலோசகரான ஜெயந்து கிருஷ்ணா, மற்ற துறைமுகங்களிட மிருந்து எதிர்கொள்ளும் போட்டி களை சுட்டிக்காட்டினார்.
இதில் ஷோவ்ஷான் விரைவில் கப்பல் எரிபொருள் விற்பனையில் ஒரு பங்கைக் கைப்பற்றும் என்று அவர் சொன்னார்.
உலகிலேயே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஆகப்பெரிய மையமாகத் திகழும் சிங்கப்பூர், கடந்த ஆண்டு ஐம்பது மில்லியன் டன் எரிபொருளை விற்பனை செய்துள்ளது. இது, உலகின் மொத்த விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கு.
இந்த நிலையில் சீனாவின் கப்பல் எரிபொருள் விற்பனை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 16.9 மில்லியன் டன்னுக்கு அதி கரித்துள்ளது என்று ஆயில்கெம் என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.