பாதுகாவல் அதிகாரிகளை அவர்களுக்குத் தொடர்பு இல்லாத வேலைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று சிங்கப்பூர் பாதுகாவல் அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும் உணவு வாங்குவதற்கும் மின்விளக்குகளை மாற்றுவதற்கும் குடியிருப்பாளர்களின் கடிதங்களை கொண்டு வருவதற்கும் அவர்களை பயன்படுத்தக்கூடாது.
சுற்றுக் காவலில் ஈடுபடுவது, சொத்துகளைப் பாதுகாப்பது, நுழைவாயில்களில் வருபவர்களை கண்காணிப்பது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்றவை அவர்களின் தலையாயப் பணிகள் என்று சங்கம் நேற்று வெளியிட்ட 36 பக்க வழிகாட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய முக்கியப் பணி களுக்கு அப்பால் மற்ற வேலைகளில் ஈடுபடச் செய்தால் நீண்டகாலப் போக்கில் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படலாம் என்று அச்சங்கத்தின் தலைவர் ராஜ் ஜோஷுவா கூறினார்.
வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்று பாதுகாவல் அதிகாரிகளுக்கான வழிகாட்டி வெளியிடப்பட்டது.
"மின்விளக்குகளை மாற்றுவது, நுழைவாயில் மின்தடுப்புகள் அல்லது மின்சாரப் பெட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரிசெய்வது போன்ற வேலைகள் பாதுகாவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படு கின்றன.
"ஆனால் இத்தகைய வேலைகள் ஆபத்தானவை. உரிமம் பெற்ற, அனுபவமுள்ள நிபுணர்களே அவற்றை கையாள முடியும்," என்று செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ் கூறினார்.
இதுபோன்ற வேலைகளில் ஈடுபட பாதுகாவல் அதிகாரிகளை சில குடியிருப்பாளர்களும் முகவர்களும் வற்புறுத்துவதாகவும் அவர் சொன்னார்.
"அது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். முகப்பில் இருப்பதால் எந்நேரத்திலும் எல்லாவித வேலைகளும் அவர் களுக்கு கொடுக்கப்படுகின்றன," என்றார் அவர்.
பாதுகாவல் ஊழியர் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளரான திரு ஸ்டீவ் டான், 25 விழுக்காடு பாதுகாவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தொடர்பு இல்லாத வேலைகள் தரப்படுவதாக கூறினார். 1,002 அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.
அதில் பாதுகாவல் அதிகாரி களுக்கு வழங்கப்படும் வேலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

