டாக்சி ஓட்டுநரை அடித்த குற்றத்திற்காக மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே ஒருவருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஆர் என் ஜே யூனியன் நிறுவனத்தைச் சேர்ந்த முகமது அல்வீ ரானா ஒப்புக்கொண்டார். அவருக்கு இப்போது வயது 26.
பங்களாதேஷிலிருந்து வந்து இப்போது சிங்கப்பூர் குடிமகனாக இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டுநர் தன்னை இன ரீதியக இழிவுபடுத்திப் பேசியதாகச் சொன்னார். ஆனால், தான் அவ்வாறு செய்யவில்லை என்றார் ராஜதுரை துரைசாமி என்ற அந்த டாக்சி ஓட்டுநர். அவருக்கு வயது 58. அடித்ததால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பார்க்க அல்வீ திரு ராஜதுரைக்கு 110 வெள்ளி இழப்பீடாக வழங்கினார்.
வேண்டுமென்றே ஒருவருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதக்கப்படலாம்.

