சிங்கப்பூர் கடற்படையின் யுஎஸ்வி எனப்படும் ஆளில்லா படகுகளால், கடல் கண்ணி வெடிகளைச் செயலிழக்கச் செய்யமுடியும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவை இப்போது தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆளில்லா படகுகள் கரையிலிருந்து இயக்கப்படும். இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தேவைப்படும் ஆள் பலத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் கண்ணி வெடிகளை அடையாளம் கண்டு அகற்றத் தேவையான நேரத்தையும் அவை குறைக்க உதவும். சிங்கப்பூர் கடற்படையின் இரண்டு ஆளில்லா படகுகள் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதியன்று தென் தீவுகளுக்கு அருகே நிகழ்ந்த பயிற்சியின்போது கடலடியில் இருந்த மாதிரி வெடியை வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்தன. இனி இந்த ஆளில்லா படகுகளால் கடலடியில் இருக்கக்கூடிய அபாயங்களை அடையாளம் கண்டு முறியடிக்கமுடியும்.
உலகளவில் இத்தகைய தற்காப்புச் செயல்முறை தயார்நிலையில் இருப்பது இது முதல் முறை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஆளில்லா படகுகளைக் கொண்டு சிங்கப்பூர் கடற்படை சோதனை நடத்தியது.
2018ஆம் ஆண்டில் ஆளில்லா படகுகள் அறிமுகமாயின.
ஆனால் அவற்றால் கடல் கண்ணி வெடிகளை அடையாளம் காண முடியுமே தவிர அவற்றைச் செயலிழக்கச் செய்யமுடியாது.

