தனது 14 வயது பேத்தியுடன் இரண்டு முறை பாலியல் உறவு வைத்துக்கொண்ட போதைப்பொருள் குற்றவாளிக்கு நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 57 வயது நபர் குறைந்த வயது பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகப் பதிவான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
திருடியதாகவும், சிறுநீர் சோதனைக்குப் போகாததாகவும் பதிவான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடத் தடை உத்தரவு உள்ளதால் ஆடவரின் அடையாளமும் வெளியிடப்படவில்லை. குறைந்த வயது நபருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

