ஐந்தாண்டுகளாகத் தனது மகளைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 46 வயது ஆடவருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 24 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
15 பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் அவர் மீது பிதிவுசெய்யப்பட்டிருந்தன. மகளின் 10லிருந்து 14காவது வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் தந்தை அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு மகள் தனது காதலனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது தனக்குத் தெரியவந்தது, அதனால் அவர் தன் மீது போலியாகக் குற்றம் சுமத்தியதாகக் குற்றவாளி வழக்கு விசாரணையின்போது கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட நிதிமன்றம் தடை விதித்துள்ளது.