சிங்கப்பூரில் புதிதாக 162 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் 87 பேர், ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமத்துடனும் ஈரச்சந்தை மற்றும் உணவு நிலையங்களுடனும் தொடர்புடையவர்கள்.
இவற்றுடன் இந்தக் குழுமத்தில் பதிவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 538க்குப் பதிவாகியுள்ளது.கேடிவி குழுமத்துடன் ஐந்து புதிய சம்பவங்களும் தொடர்புடையவை. இந்தக் குழுமத்தில் மொத்தம் 220 பேர் அடங்குவர்.
உள்ளூரில் பரவிய 162 பேரில் 59 பேர் முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டவர்கள். மேலும் தொடர்புகளைக் கொண்ட 51 பேர் கண்காணிப்புகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன் தொடர்பில்லாத 52 பேர் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.