முன்களப் பணியாளர்கள் அமர்ந்து உணவருந்த வசதி

முன்களப் பணியாளர்கள் அமர்ந்து உணவருந்த வசதி

1 mins read
fc6e7a13-13af-4b94-b83b-68e74c0f4a96
-

இரண்­டாம் கட்ட (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) நடை­மு­றை­கள் நடப்­பில் உள்ள தற்­போ­தைய சூழ­லில் விநி­யோக ஓட்­டு­நர்­கள், டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள், முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோர் அமர்ந்து உண­வ­ருந்­து­வ­தற்­கான இடங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளி­யிட்ட அவர், "இன்று நான் மதிய உணவை வாங்கி வீட்­டிற்கு எடுத்­துச் சென்று சாப்­பிட்­டேன். எனி­னும், நமது முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் வெளி­யில் வேலையை முடிக்க வேண்­டி­யி­ருக்­கும்.

"உங்­க­ளுக்கு நற்­செய்தி. எங்­க­ளது பங்­கா­ளி­க­ளு­டன் சேர்ந்து நீங்­கள் உண­வ­ருந்­து­வ­தற்­கான இடங்­களை அமைத்து தந்­துள்­ளோம். இது உங்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும் என நம்­பு­கி­றோம்," என்­றார்.

ஊழி­யர்­கள் உண­வ­ருந்­து­வ­தற்­கான இடங்­களை கீழே உள்ள ஃபேஸ்புக் பக்­கத்­தில் காண­லாம்:

www.facebook.com/NTUCDeliveryChampions/posts/ 136624555280054.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து உண­வுக் கடை­களில் அமர்ந்து உண­வ­ருந்த நேற்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தடை விதிக்­கப்­பட்டுள்ளது.