கடுமையாகும் கொவிட்-19 கட்டுப்பாடுகள்: தயார்நிலையில் திரையரங்குகள்

கடுமையாகும் கொவிட்-19 கட்டுப்பாடுகள்: தயார்நிலையில் திரையரங்குகள்

2 mins read
ee79f738-3efa-41a9-911e-f928e9541bed
-

சிங்­கப்­பூ­ரில் இரண்­டாம் கட்ட (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) நடை­மு­றைக்­குத் திரும்ப தாங்­கள் தயா­ராக இருப்­ப­தாக திரை­ய­ரங்கு நிறு­வ­னங்­கள் கூறி­யுள்­ளன.

எனி­னும், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் நடப்­புக்கு வந்­தி­ருப்­பது குறித்து சில திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் வருத்­தம் தெரி­வித்­துள்­ள­னர்.

ஷா திரை­ய­ரங்கு இயக்­கு­ந­ரான திரு மார்க் ஷா, புதிய வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பூர்த்­தி­செய்ய தமது திரை­ய­ரங்­கு­கள் தயா­ராக இருப்­ப­தா­கக் கூறி­னார். சிங்­கப்­பூ­ரில் ஒன்­பது இடங்­களில் ஷா திரை­ய­ரங்­கு­கள் இயங்­கு­கின்­றன.

"கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் நடப்­புக்கு வந்­தி­ருப்­பது குறித்து எங்­க­ளுக்கு ஏமாற்­றம் ஏற்­பட்­டா­லும், இத்­த­கைய நடை­மு­றை­கள் மீண்­டும் அறி­மு­கம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை எங்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­கிறது," என்­றார் திரு ஷா.

மே 16 முதல் ஜூன் 21 வரை இரண்­டாம் கட்ட (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) நடை­முறை நடப்­பில் இருந்­த­போது திரை­ய­ரங்­கு­களில் உணவு, பான விற்­ப­னைக்­குத் தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதன் பின்­னர் கடந்த மாதம்­தான் விற்­பனை மீண்­டும் தொடங்­கி­யி­ருந்­தது.

திரை­ய­ரங்­கு­க­ளின் வரு­வா­யில் உணவு, பான விற்­பனை கிட்­டத்­தட்ட பாதி­ய­ளவு அங்­கம் வகிக்­கும் நிலை­யில், அவற்­றின் விற்­ப­னைக்­குத் தடை விதிப்­பது லாபத்­தைக் கணி­ச­மாக குறைக்­கும் என்று சில திரை­ய­ரங்­கு­கள் கூறு­கின்­றன.

இதன் கார­ணத்­தால் ஏற்­கெ­னவே கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போது செல­வைக் குறைப்­ப­தற்­காக ஃபில்ம்­கார்ட் சினி­பி­ளேக்­சஸ், தி புரோ­ஜெக்­டர் ஆகிய திரை­ய­ரங்­கு­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டி­ருந்­தன.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நிரந்­தர நோயா­கக் கரு­தப்­படும் என்று கூறப்­பட்ட நிலை­யில், தற்­போது மீண்­டும் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பிற்கு வந்­தி­ருப்­பது ஏமாற்­றம் தரு­வ­தாக தி புரோ­ஜெக்­டர் நிறு­வ­ன­ரான திரு­மதி கேரன் டான் குறிப்­பிட்­டார்.

நேற்று தொடங்கி ஆகஸ்ட் 18 வரை இரண்­டாம் கட்ட (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) நடை­முறை நடப்­பில் இருக்­கும்.

நிகழ்ச்­சிக்கு முந்­தைய பரி­சோ­தனை அமல்­ப­டுத்­தப்­பட்­டால் 100 பேர் வரை திரை­ய­ரங்­கிற்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். பரி­சோ­தனை முறை இல்­லா­வி­டில் 50 பேர் வரை மட்­டும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய திரை­ய­ரங்கு நிறு­வ­ன­மான கோல்­டன் வில்­லேஜ் மல்­டி­பி­ளெக்ஸ், புதிய கட்­டுப்­பா­டு­க­ளுக்­குத் தயா­ராக இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் கூறி­னார்.

"கொவிட்-19 விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு வாடிக்­கை­யா­ளர்­கள் நடப்­பதை நாங்­கள் உறுதி செய்­வோம்," என்­றார் அவர்.

"பல மாத தாம­தத்­திற்­குப் பிறகு ஹாலி­வுட் திரைப்­ப­டங்­கள் இப்­போது வெளி­யி­டப்­ப­டு­வ­தால், கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் உள்ள சூழ­லி­லும் திரை­ய­ரங்­கு­களில் அவற்­றைக் காண ரசி­கர்­கள் ஆர்­வத்­து­டன் இருப்­பார்­கள் என நம்­பு­கி­றோம்," என்று அப்­பேச்­சா­ளர் சொன்­னார்.