மாணவிக்கு கிருமித்தொற்று; வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறியது பள்ளி

மாணவிக்கு கிருமித்தொற்று; வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறியது பள்ளி

1 mins read
7246d069-dc4b-4b7b-9245-8f9da9e2e2ac
-

சிஎச்­ஐஜே உயர்­நி­லைப் பள்ளி (தோ பாயோ) மாண­விக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்டுள்­ளது. அதை அடுத்து, அப்பள்ளி மாண­வர்­கள் நேற்று முதல் வீட்­டி­லி­ருந்து பயி­லும் நடை­முறைக்கு மாறி­னர்.

குடும்ப உறுப்­பி­னர் மூலம் அந்த மாண­விக்­குக் கிருமி தொற்­றி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்ட மாணவி, கடை­சி­யாக கடந்த திங்­கட்­கி­ழமை பள்ளிக்­குச் சென்­றி­ருந்­தார்.

வளா­கத்­தைக் கிரு­மி­நா­சினி கொண்டு முழு­மை­யா­கச் சுத்­தி­கரிப்­ப­தற்­காக வீட்­டி­லி­ருந்து பயிலும் நடை­முறை செயல்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அப்­பள்ளி குறிப்­பிட்­டது.

உயர்­நிலை 2லிருந்து 5 வரை பயி­லும் மாண­வர்­கள் இன்று பள்ளிக்­குத் திரும்­பு­வர்.

உயர்­நிலை 1ல் பயி­லும் மாண­வர்­கள், அடுத்த புதன்­கி­ழமை பள்ளிக்­குத் திரும்­பு­வர்.

பாதிக்­கப்­பட்ட மாண­வி­யு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் நல­மாக இருப்­ப­தா­க­வும் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.