சிங்கப்பூரில் புதிதாக 130 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் 78 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் கிருமித்தொற்றைச் சேர்நதவர்கள்.அக்குழுமத்தில் இதுவரை 638 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கேடிவி குழுமத்தில் ஆறு புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் குழுமத்தில் மொத்தம் 227 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சமூகத்தில் பதிக்கப்பட்டுள்ள 130 பேரில் 64 பேர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
மேலும், வெளிநாட்டில் கிருமித்தொற்றுக்கு உள்ளாகி இங்கு வந்துள்ள மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 63, 924ஆக உள்ளது. மேல் விவரங்கள் வெள்ளிக்கிழ இரவு அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.